இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, May 3, 2014

பூசு மஞ்சள் புன்னகை!

நாகரிகத்தின் தாக்கத்தால் நாளுக்கொரு கலாசாரமும் பாரம்பரியமும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று பெண்களின் மஞ்சள்  தேய்த்துக் குளிக்கிற பழக்கம். மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள்.  ஆனாலும், மஞ்சளை மறக்காத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பூசு மஞ்சள் தூள் தயாரிப்பில் பிசியாக  இருக்கிறார் கண்ணம்மா. குழந்தைகள், இளம்பெண்களுக்கு ஒரு  வகை, கொஞ்சம் வயதான பெண்களுக்கு ஒரு வகை என இரண்டு வித மஞ்சள் தூள்  தயாரிக்கிறார் இவர்.‘‘நான் வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சு உபயோகிச்சுத்தான் பழக்கம். கடைகள்ல வாங்கற...

வாவ் வாக்ஸ் கிராஃப்ட்!

4 இட்லியும் மூன்று விதமான சட்னியும் 200 ரூபாய்... ஒரே ஒரு தோசை 150 ரூபாய்... ஒரு கேக் 500 ரூபாய்... இதெல்லாம் எந்த ஸ்டார்  ஹோட்டலில் என்று கேட்கிறீர்களா? இவற்றில் எதுவுமே சப்புக் கொட்டி சாப்பிடக் கூடியவை அல்ல. ஷோ கேஸில் வைத்து அழகு பார்ப்பவை.  யெஸ்... சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமாரின் கைவண்ணத்தில் உருவாகும் இவை அனைத்தும் மெழுகினால் செய்யப்படுகிற  அழகுப் பொருட்கள். வாக்ஸ் கிராஃப்ட் எனப்படுகிற இந்த முறையில், இட்லி, தோசை, சட்னி, கேக் தவிர, மைசூர்பாகு, லட்டு, பாதுஷா, குலோப்  ஜாமூன் உள்ளிட்ட எல்லா உணவு வகைகளையும் செய்ய முடியுமாம்!‘‘வீடுகள்ல அழகுக்காக வைக்கலாம். புதுசா ஸ்வீட் ஸ்டால், ஹோட்டல்...

பஞ்சலோக நகைகளில் பிசியாகலாமா

பெண்களின் விருப்பப் பட்டியலில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு அடுத்த இடம் பஞ்சலோக நகைகளுக்குத்தான். கவரிங் நகைகளைப்  போல பத்தே  நாட்களில் பல் இளிக்காது. பளீரென மின்னி, தன்னைப் போலி எனக் காட்டிக் கொள்ளாது. தங்கத்தோடு தங்கமாக  சமர்த்தாகப் பொருந்திப்  போவதுதான் பஞ்சலோக நகைகளின் சிறப்பம்சமே. ஐம்பொன் என்றும் அழைக்கப்படுகிற இந்த பஞ்சலோக  நகை விற்பனையில் பிசியாக  இருக்கிறார்  சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி!‘‘என்னோட சொந்த உபயோகத்துக்காக வாங்கின பஞ்சலோக நகைகளைப் பார்த்துட்டு, நிறைய பேர் அவங்களுக்கும் அதே மாதிரி  வேணும்னு  கேட்டாங்க. அப்ப அந்த நகைகளை வாங்கி, வீட்லயே வச்சு விற்பனை...

அன்பளிப்புப் பை

பரிசுப் பொருட்களைவிட அவற்றைச் சுமந்து வருகிற பைகளும் பெட்டிகளும் பல நேரங்களில் நம் கவனம் ஈர்க்கும். பரிசுப் பொருட்களுக்கு இணையாக  அந்தப் பைகளைக் கூடப் பத்திரப்படுத்துவோம். அப்படிப்பட்ட அழகுப்பைகளைத் தயாரிப்பதில் நிபுணி, அரக்கோணத்தைச் சேர்ந்த ஹேமாவதி!‘‘ஒரு சின்ன சாக்லெட்டை அன்பளிப்பா கொடுத்தாக்கூட, அதையும் ஒரு அழகான அலங்காரப் பைக்குள்ள வச்சுக் கொடுக்கிறதுதான் இன்னிக்கு  ஃபேஷன். அப்படிக் கொடுக்கிறபோது அன்பளிப்போட மதிப்பு பல மடங்கு கூடும். பிளாஸ்டிக்கை தவிர்க்கணும்னு நினைக்கிறவங்களும், பெரிய  பிளாஸ்டிக் பைகள்ல அன்பளிப்புகளைப் போட்டுக் கொடுக்கிறதுக்குப் பதிலா இது மாதிரி சுற்றுச்சூழலுக்கு உகந்த மெட்டீரியல்கள்ல...

விதம் விதமா மிதியடி செய்வோம

வீட்டுக்கு வீடு வாசல்படி...வாசல்படி உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற அதி அத்தியாவசியமான ஒன்று மிதியடி. பழைய கோணிகளை மிதியடிகளாக உபயோகித்த காலம் மாறி, இன்று வாசலையே அழகாக்கும் அளவுக்கு விதம் விதமான மாடல்களிலும் மெட்டீரியல்களிலும் மிதியடிகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஹேமலதாவின் கைவண்ணத்தில் அழகழகான வடிவங்களில் மிதியடிகள் உருவாகின்றன! ‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். வேலைக்குப் போக வேண்டிய தேவையில்லைன்னாலும் பொழுது போகணுமேன்னு நிறைய கைவினைக் கலைகளைக் கத்துக்கிட்டேன். அதுல ஒண்ணுதான் மிதியடி பின்றது. சணல் கயிறு, பழைய துணி, புதுசா தைக்கிறதுல வீணாகிற துணிகள்னு எதைக் கொண்டும் மிதியடி பின்னலாம். மிதியடி என்ன கடைகள்ல கிடைக்காத...

மெழுகு விளக்கு மேஜிக்!

மாறEPP Group Urges Governments to Use ... தீபாவளியைத் தொடர்ந்து, கார்த்திகை தீபம், புத்தாண்டு என வெளிச்சத் திருவிழாக்கள் வரிசை கட்டி நிற்கும் நேரமிது. விதம் விதமாக விளக்கேற்றி  ஒளிரச் செய்வதன் மூலம் வீடே சுபிட்சமாகப் பிரகாசிக்கும். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன் செய்கிற மிதக்கும் மெழுகு விளக்குகள்  புதுமையானவை... அழகானவை!‘‘நிறைய கைவினைக் கலைகள் தெரியும். அதுல மெழுகு உருவங்கள் செய்யறதும் ஒண்ணு. மெழுகுல பொம்மைகள் செய்திட்டிருந்த நான், அதோட  அடுத்தகட்டமா, விளக்குகள் செய்ய ஆரம்பிச்சேன். ரோஜா, செம்பருத்தி, சூரியகாந்தின்னு பூக்கள் வடிவ விளக்குகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கு.  அடுத்து பந்து வடிவ மெழுகுகளையும்,...

சபாஷ் சாப்பாட்டுக் கடை!

கைமேல் காசு மட்டுமின்றி, கன்னாபின்னாவென லாபமும் பார்க்கக் கூடிய ஒரு சில தொழில்களில் உணவு பிசினஸும் ஒன்று.  சுவை, ஆரோக்கியம்,  விலை என எல்லாமே திருப்தியாக இருக்கும் ஓட்டல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வாடிக்கையாளர் களை ஈர்க்கும் வரை ஒரு தரத்திலும்  வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்ததும் வேறொரு தரத்திலும் உணவு கொடுக்கும் நபர் களுக்கு மத்தியில், சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த  மாலா வித்தியாசமானவர். 20 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிற  மாலாவின் கைப்பக்குவத்துக்கு அந்த ஏரியாவாசிகள் அத்தனை பேரும்  ரசிகர்கள்.‘‘பெரிசா படிக்கலை. சமையல் மட்டும்தான் தெரியும். ஒருமுறை என் பசங்களுக்கு ஓட்டல்ல தோசை வாங்கினப்ப,...

சூப் ஃபார் சூப்பர் பிசினஸ்

நீங்கதான் முதலாளியம்மா!குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவு சூப். எல்லா நாளும் சூப் குடிக்கலாம்... எப்படிப்பட்டவரின் தேவையையும் நிறைவேற்றும் என்பதே சூப்பின் சிறப்பம்சம். உடல்நலமில்லாதவர்களுக்கும் சூப் கொடுக்கலாம்... உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் அதற்கேற்ற சூப் உண்டு...உடல் எடை கூட வேண்டும் என்கிறவர்களுக்கும் பாதாம் சூப் போன்றவை உதவும். காய்கறி சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கும், காய்கறிகளை சாப்பிட முடியாத முதியவர்களுக்கும் அவற்றை சூப் வடிவத்தில் கொடுக்கலாம். இன்னும் ஜலதோஷம், மூச்சுப்பிடிப்பு, உடல் வலி, களைப்பு என எல்லாவற்றுக்கும் சூப்பையே மருந்தாகக் கொடுக்க முடியும்.தெருவுக்குத்...

ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி !

பலகாரத்துக்கேற்ற ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்… என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள ‘காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி. இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான ‘வறட்சியிலும் வாடாத வரகு… பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே...

சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை…

தற்போதைய சூழ்நிலையில், விவசாயப் பரப்பு குறைந்துகொண்டே வருவதற்கு… வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முக்கிய காரணம். அதனால், விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரையில் பலவிதமான இயந்திரங்களின் தேவை அவசியமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப பல கருவிகளும் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன. இப்படிப்பட்ட கருவிகளை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும், மானியம் கொடுத்து சொந்தமாக வாங்க ஏற்பாடு செய்வதன் மூலமாகவும்… இயந்திரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது, தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை. இத்துறையின் செயல்பாடுகள் பற்றி, வேலூர் மாவட்ட...

பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்... காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி...

மாத்தி யோசிக்கும் பிசினஸ்மேன்கள்! - வெற்றிக்கு வித்திடும் வித்தியாசமான சூழல்கள்

ஒரு தொழில் ஓஹோவென வளர்வதற்கு முக்கியமான தேவை, அந்தத் தொழில் மூலம் கஸ்டமர்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான அனுபவம்தான். இந்த அனுபவம் மட்டும் ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போய்விட்டால், அந்த கஸ்டமர் அந்த நிறுவனத்தைத் தேடி அடிக்கடி வருவார் என்பதே பிசினஸ் ரகசியம். சென்னையில் வித்தியாசமான சூழலைத் தரும் சில நிறுவனங்களை தேடிப்போய், அந்தச் சூழலை உருவாக்கும் ஐடியா எப்படி பிறந்தது என்று விசாரித்தோம். நாங்கள் முதலில் கோடம்பாக்கத்தில் உள்ள டவுன்பஸ் ஹோட்டலுக்குச் சென்றோம். கோடம்பாக்கத்தின் அடையாளம்! பெயருக்கேற்ப முழு ஹோட்டலை யும் டவுன்பஸ் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். உண்மையான பஸ் போன்றே சக்கரம், கண்ணாடி ஜன்னல், சைடுமிரர் என்று இருக்கிறது வெளிப்புறம்....

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites