இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Wednesday, March 19, 2014

மாடித்தோட்ட வெள்ளாமை!

எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்! ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது…...

அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...

அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே! விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம்,...

டாபிகல் டாப்ஸ்

கடை கடையாக ஏறி இறங்கி தேடித் தேடி சல்வாரோ, சேலையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. மேட்ச்சிங் துப்பட்டாவுக்கு தெருத்தெருவாக  அலைய வேண்டியதில்லை. இன்றைய இளம் பெண்களின் ஏகோபித்த வரவேற்பு, ஜீன்ஸ் அல்லது லெக்கிங்ஸ்... அதற்கு மேல் தொடை வரை நீளும்  டாப்ஸ். சிம்பிளாக அதே வேளை அழகாகவும் காட்டக்கூடிய இந்த டாப்ஸ் ஒல்லியோ, குண்டோ, குட்டையோ, நெட்டையோ... எப்படிப்பட்டவர்களுக்கும்  அம்சமாகப் பொருந்தும் என்பதே ஹைலைட்டான விஷயம்.சென்னை, பெருங்களத்தூரைச் சேர்ந்த ராகிலாவுக்கு முழுநேர பிசினஸே டாப்ஸ் தைப்பதுதான்!‘‘25 வருஷமா தையலைத் தவிர வேற எதுவும் தெரியாது. என் மகள் ஐடி கம்பெனியில வேலை பார்க்கிறா. அவளுக்காக டாப்ஸ் தச்சுக் கொடுப்பேன்.  அவ போட்டுக்கிட்டுப்...

Sunday, March 9, 2014

தர்மபுரி தென்னை நார் கயிறு சீனாவுக்கு ஏற்றுமதி

தர்மபுரி : தர்மபுரி அருகே தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் நார் கயிறு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சீனாவிற்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது.  தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் பொள்ளாட்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில் தேங்காய் நார் கயிறு தயாரிக்கப்படுகிறது. இதில், தர்மபுரி மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் டவுன், அனுமந்தபுரம், கெரகோடஅள்ளி, கள்ளம்பட்டி, மண்ணாடிப்பட்டி, பாளையம்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், அரசம்பட்டி ஆகிய இடங்களில் தேங்காய் நார் கயிறு மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட...

10 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட பஞ்சாப் எருமை!

பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மொகாலி பகுதியில் 'பஞ்சாப் விவசாய உச்சி மாநாடு’ நடந்து. அதில், சிறந்த கால்நடைகள் பற்றிய கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன்னுடைய 'கொழு கொழு’ எருமையை காட்சிக்கு நிறுத்தியிருக்கிறார். 1,200 கிலோ எடை, ஐந்தே முக்கால் அடி உயரம், 11 அடி நீளம் கொண்ட அந்த எருமை, பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அந்த எருமைக்கு தினமும் தீவனத்துடன் 10 லிட்டர் பாலும் கொடுப்பாராம், சோமல். சிறந்த எருமை வளர்ப்புக்கான பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசைப் பெற்றுள்ளார். அந்த எருமையைக் கண்டு வியந்த வெளிநாட்டினர் சிலர், பத்து கோடி ரூபாய்...

வறட்சியிலும் வளமான வருமானம்! மகசூல்

 நாள் ஒன்றுக்கு மூன்று மணி நேரம் மின்சாரம்; தண்ணீர் வற்றிய கிணறு; தலைவிரித்தாடும் வேலையாட்கள் தட்டுப்பாடு; இவற்றுக்கு இடையில்... வானத்தையும், வருண பகவானையும் நம்பி, மானாவாரி பூமியில் விவசாயம் செய்வது என்பதே பெரும் சாதனைதான். இந்த நிலையில், 26 ஏக்கர் நிலத்தில் சப்போட்டா, மா, நெல்லி, கொய்யா என பழவகைகளை சாகுபடி செய்து, நல்ல வருமானத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்... திருவண்ணாமலை மாவட்டம், வடக்குமேடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந் திரன்-மேகலா தம்பதி என்பது, நம்பிக்கையூட்டும் விஷயம்தானே! வறண்டு கிடக்கும் நிலங்களுக்கு, மத்தியில் செழிப்பாக இருந்த தோட்டத்தில் காய்த்துக்குலுங்கிய நெல்லி மரங்களுக்கிடையில் ராஜேந்திரன்-மேகலா தம்பதியைச் சந்தித்தோம்....

மாநில விருது பெற்ற வெற்றி விவசாயி

 பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின நாளில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது, தமிழக அரசு. அந்த வகையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக விளைச்சல் எடுத்த ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி என். பரமேஸ்வரனுக்கு 5 லட்ச ரூபாய் பரிசும், பதக்கமும் வழங்கி கௌரவப் படுத்தியுள்ளார், முதல்வர் ஜெயலலிதா. விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தபோது, ''இந்த விருது முறைப்படி என் மனைவிக்குத்தான் போய்ச் சேரணும். அவுங்க கொடுத்த ஊக்கமும், உழைப்பும்தான் விருது வாங்கிக் கொடுத்திருக்கு'' என்று பெருமையோடு மனைவியை அறிமுகப்படுத்தி...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites