இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Saturday, August 31, 2013

பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு ! விற்பனையில் 10% லாபம்

முன்பெல்லாம் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கப் போனால், வீட்டிலிருந்து கேரியர் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஆனால், இன்றோ கையை வீசிக் கொண்டு ஓட்டலுக்குப் போனாலும், காசைக் கொடுத்தால் சாம்பார் முதல் ரசம், மோர், பொரியல், பாயசம் என அனைத்து அயிட்டங்களையும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து கொடுத்து விடுகிறார்கள். சாப்பாடு மட்டுமல்ல, பூ முதல் புளி வரை அத்தனையும் இன்று பிளாஸ்டிக் பைகளில் அடக்கம். சுற்றுச்சூழல் பிரச்னைகள் காரணமாக குறிப்பிட்ட மைக்ரான் அளவு கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே தயாரிக்க அரசு அனுமதிக்கிறது. நல்ல டிமாண்ட் உள்ள தொழில் செய்ய நினைக்கிறவர்கள் அரசு அனுமதித்துள்ள தரத்தில் பைகளைத் தயாரித்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். சந்தை...

தேங்காய் எண்ணெய்

வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. சந்தை வாய்ப்பு! உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக...

செல்லோ டேப்-செல்லோ டேப்

பரிசுப் பொருட்களை அழகாக பேக்கிங் செய்யணுமா? கடித உறைகளை ஒட்டணுமா? படங்களை சுவரில் ஒட்டணுமா? இல்லை, குழந்தைகளின் கிழிந்துபோன நோட்டுப் புத்தகத்தை ஒட்டணுமா? எல்லாவற்றுக்கும் நாம் தேடும் ஒரே ஒரு பொருள் செல்லோ டேப்! அதுமட்டுமல்ல, டெக்ஸ்டைல்ஸ், தோல் பொருட்கள், ஹார்டுவேர் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்த செல்லோ டேப் மிக முக்கியமான பொருளாகப் பயன்படுகிறது. அவ்வளவு தேவை மிகுந்த பொருளான செல்லோ டேப் தயாரிப்பது குறித்துதான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகிறோம்... சந்தை வாய்ப்பு! ஸ்டேஷனரி கடைகள், ஃபேன்ஸி ஸ்டோர்கள் என சில்லறை கடைகளிலும் பெரிய பெரிய தொழிற்சாலைகளிலும் இந்த செல்லோ டேப்புகளை விற்பனை செய்ய முடியும். செல்லோ டேப் பிஸினஸ் ஒவ்வொரு ஆண்டும் 15% வளர்ச்சி...

அதிக வருமானம் தரும் பட்டு வளர்ப்பு!

ஒரு ஏக்கர்… ஒரு மாதம்…30,000 ”விவசாயத்தோடு… அதுசார்ந்த உபதொழில்களையும் சேர்த்து செய்தால், நிச்சயமாகப் பொருளாதார ரீதியில் பெருவெற்றிதான்” என்பது விவசாயப் பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கருத்து! இதைச் சரியாகப் புரிந்து கொண்ட பலரும் ஆடு, மாடு, கோழி, பட்டுப்புழு… என வளர்த்து கூடுதல் லாபம் ஈட்டி வருகிறார்கள். ”நானும் அவர்களின் ஒருவன்” என்று இங்கே சந்தோஷம் பகிர்கிறார்… வெண்பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து சிறந்த வருமானம் பார்த்து வரும், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் காசிலிங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இதற்காக இவரைப் பாராட்டி, ’2011 மற்றும் 2012-ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்தப் பட்டுக்கூடு உற்பத்தியாளர்’...

பட்டு என்றால் ஆரணி!

பட்டுச் சேலை என்றாலே பெண்களுக்குப் பரவசம் வருவது இயல்பு தான். ஆரணிப் பட்டு, தமிழகத்தின் அழகு அடை யாளங்களில் ஒன்று. எப்படித் தயார் ஆகின்றன இந்தப் பட்டுப் புடவைகள்? ”பட்டு என்றாலே, காஞ்சிப் பட்டு என்கிறார்கள். ஆனால், ஆரணி பட்டு காஞ்சிப் பட்டுக்கு கொஞ்சமும் சளைத்தது இல்லை. ஆரணியில் மட்டும் ஐந்து லட்சம் பேர் இந்த பட்டு நெசவுத் தொழிலை நம்பி இருக்கிறார்கள். இங்கு உற்பத்தியாகும் பட்டுப் புடவைகளை வாங்கிச் சென்று காஞ்சி புரம் பட்டு என்று விற்கும் விற்பனையாளர்களும் உண்டு!” என்கிறார்கள் ஆரணி ஸ்ரீ லக்ஷ்மி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர்கள் முருகனும் சிவராமனும். ”பட்டுப் புடவைக்குத் தேவையான பட்டு நூல், பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து வரவழைக்கப்படும்....

பேன்சி நகைகள் – ஃபேஷன் நகைகள்

மதுரையின் பெருமைகளைச் சொல்லி மாளாது. மீனாட்சி அம்மன் கோயில், குண்டு மல்லிகை, ஜிகர்தண்டா என பல பெருமைகள். மதுரையில் பெயரெடுத்த எல்லாமே உலகம் முழுவதும் பெயர் வாங்கிவிடுகிறது என்பதும் உண்மை. அந்த வகையில் பரபரப்பான மதுரை நகரில் சத்தமில்லாமல் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கிறது ஃபேன்ஸி நகைகளின் விற்பனை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் மேற்கு கோபுரத்திற்கு அருகே உள்ளது புது வளையல்காரத் தெரு. இந்த தெருவில் பிரதான தொழிலே ஃபேன்ஸி நகைகள், கோல்டு கவரிங் நகைகள் விற்பனைதான். தமிழகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக மத்திய மற்றும் தென் தமிழகத்தில் இருக்கும் சிறுவியாபாரிகள் இந்த தெருவிற்கு படையெடுப்பார்கள். நாமும் படையெடுத்தோம். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள பலரும் வடமாநிலத்தவர்கள்தான். மும்பையிலிருந்து நேரடியாகப் பொருட்களை வாங்கி, இங்கு மொத்த விற்பனை செய்கின்றனர். இங்கிருந்துதான் தென் தமிழகத்தின் பல சில்லறை விற்பனையாளர்கள்...

எந்த ஊரில் என்ன வாங்கலாம் - ஈரோடு

  இத்தனை சிறப்புகளையும் கொண்ட மஞ்சள் விலையை இந்திய அளவில் தீர்மானிக்கும் ஊர் எது தெரியுமா? நம்ம ஈரோடுதான். ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் அதிக அளவில் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்றே பெயர். இந்தியாவில் உற்பத்தியாகின்ற மஞ்சளில் 23 சதவிகித மஞ்சள் இங்குதான் உற்பத்தியாகிறதாம். எனவே, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் மொத்த வியாபாரிகள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈரோடு மார்க்கெட்டைத்தான் நம்பி இருக்கின்றனர். விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு இங்குள்ள வேளாண்மை மையம் உதவி செய்கிறது. இங்கு உற்பத்தியாகின்ற மஞ்சளை விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து ஈரோடு மஞ்சள் விவசாயிகள் சிலரிடம் பேசினோம்....

எந்த ஊரில் என்ன வாங்கலாம்! - குமாரபாளையம்.

  ஈரோட்டிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குமாரபாளையம். இந்த ஊர் ஈரோட்டுக்கு அருகில் இருந்தாலும் நாமக்கல் மாவட்ட எல்லையில் வருகிறது. சின்ன ஊர்தான் என்றாலும், இங்கிருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் கைலி ஏற்றுமதியாகிறது. காரணம், இங்கு தயாராகும் கைலி தரத்துக்குப் பெயர் போனவை! இதுபற்றி நம்மிடம் பேசினார் குமாரபாளையம் கொங்கு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சேகர். ''குமாரபாளையமும் அதற்குப் பக்கத்தில் இருக்கிற  பள்ளிப்பாளையமும் விசைத்தறி மூலம் கைலிகள் தயாரிப்பதில் தமிழகத்திலேயே முன்னணியில் உள்ளன. 1975-க்குப் பிறகு தமிழகத்தில் காட்டன் கைலிகள் பரவலாகப் புழக்கத்தில் வர ஆரம்பித்ததிலிருந்தே நாங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டோம்....

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன் திருநெல்வேலி - அல்வாஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவாகோவில்பட்டி - கடலைமிட்டாய்பண்ருட்டி - பலாப்பழம்மார்த்தாண்டம் - தேன்பவானி - ஜமுக்காளம்உசிலம்பட்டி - ரொட்டிநாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்பொள்ளாச்சி - தேங்காய்ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்வேதாரண்யம் - உப்புசேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியாசாத்தூர் - காராசேவு, மிளகாய்மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்துதிருப்பதி - லட்டுமாயவரம் - கருவாடுதிருப்பூர் - பனியன், ஜட்டிஉறையூர் - சுருட்டுகும்பகோணம் - வெற்றிலை, சீவல்தர்மபுரி - புளி,...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites