இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Thursday, February 21, 2013

படிப்பறிவு இல்லை.. கைகொடுத்தது பால்பண்ணை: ரூ.1 கோடி சம்பாதிக்கும் கிராமத்து பெண்

வதோதரா: கடந்த 12 ஆண்டுக்கு முன்னர்.. அந்த பெண் சாதாரண கிராமத்துவாசி. இப்போது மிகப்பெரிய கம்பெனியின் தலைமை நிர்வாகி வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக சம்பாதிக்கிறார். நாட்டை திரும்பி பார்க்க வைத்துள்ள அந்த கிராமத்து பெண் துளியும் படிப்பறிவு இல்லாதவர். இப்போது 40 பேருக்கு வேலை கொடுத்து சம்பளமும் வழங்கி வருகிறார்.நாட்டில் வெண்மை புரட்சிக்கு வித்திட்ட மாநிலம் குஜராத். இங்குள்ள சபர்கந்தா மாவட்டம் பென்தர்புரா கிராமத்தை சேர்ந்தவர் ரமிலாபென்(43). இவரது கணவர் கோவிந்த்பாய். எழுத படிக்க தெரியாது. விவசாய வேலையும் சரிப்பட்டு வரவில்லை. சொந்தமாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ரமிலா மனதில் தொடர்ந்து உறுத்தி கொண்டிருந்தது. குஜராத் மாநிலம் பால் உற்பத்தியில் தன்னிகரற்று திகழ்கிறது. நாட்டில் வெண்மை புரட்சிக்கு காரணமாக இருந்த பால் உற்பத்தி இயக்கம், அவருக்கு நம்பிக்கையை கொடுத்தது. மாடுகள் வளர்த்து நாமும்...

சுயதொழில் தொடங்க ரூ.25 லட்சம் கடனுதவி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் செய்வதற்கு வங்கிமூலம் ரூ.25 லட்சம் கடனுதவி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய சிறுதொழில் துறை இணையமைச்சர் கே.எச்.முனியப்பா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வேலையில்லாமல் திண்டாடிவரும் இளைஞர்கள், இளம்பெண்கள் சுயதொழில் செய்வதற்கு பிரதமரின் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கி மூலம் ரூ.25 லட்சம் வரை கடனுதவி அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் சிறுதொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. ரூ.25 லட்சம் கடனுதவிக்கு மறு உத்தரவாதம் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது. 630 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். தொழில் செய்ய முன்வரும் இளைஞர்களுக்கு தேவையான கடன் உள்ளிட்ட உதவிகளை 3 மாதங்களில் செய்து தரவும் அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது 3 மாதங்களில் திட்டம்...

சுயதொழில் வாய்ப்பு என்றால் என்ன

அதன்பொருள், நீங்களே உங்கள் முதலாளி/எஜமான் அல்லது உங்கள் சொந்த வியாபாரத்தை நீங்களே நடாத்துபவர் என்பதாகும். அவற்றில் பின்வருவன உள்ளடங்கும்: உங்கள்செயன்முறைகளை மேற்கொள்ளும் முறை, இடம்.நேரம் ஆகியவற்றை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றீர்கள். உங்களுக்குச் சொந்தமான கருவிகள், உபகரணங்களயே நீங்கள் பாவிக்கின்றீர்கள். எல்லா நடைமுறைச்செலவுகளும் உள்வாங்கப்படுகிறது. (சம்பளம் எடுக்காமலேயே) சுதந்திரமாக ஆதாயத்தை ஏற்படுத்துதல் அல்லது நஷ்டத்தை அனுபவித்தல் சுதந்திரமான ஒப்பந்தக்காரர்களாக வேலை செய்பவர்கள்(freelancing - சுதந்திரமாக தொழில்செய்பவர் என அழைக்கப்படுவர்) வியாபாரச்சொந்தக்காரர்கள் தரகுக்கூலி அடிப்படையில் வேலைசெய்யும் விற்பனையாளர் விவசாயிகளும் மீனவர்களும் சாதகங்களும் பாதகங்களும்அது உங்களுக்குப்பொருத்தமாக அமைகிறதா எனப் பாருங்கள் தான்கொண்ட கருத்தில் நம்பிக்கை இருக்கவேண்டும்....

Wednesday, February 13, 2013

கைப்பெட்டி இல்லாத வீடும் உண்டா?

கைப்பெட்டி இல்லாத வீடும் உண்டா? தங்கமோ, வைரமோ இல்லாவிட்டாலும், கவரிங் நகைகளைப் பத்திரப்படுத்தவும் நகைப்பெட்டியின் உபயோகம் தவிர்க்க முடியாது. நகை வாங்கும்போது கடைகளில் கொடுக்கிற ஒரே மாதிரியான பெட்டிகள் இன்று அவுட் ஆஃப் ஃபேஷன். விதம்விதமான மாடல்களில், வித்தியாசமான பொருட்களில் செய்யப்படுகிற நகைப்பெட்டிகளுக்கு மவுசு அதிகம். என்னென்ன தேவை? முதலீடு? ‘‘மர ஷீட்டுகள், அலங்கரிக்க கற்கள் மற்றும் லேஸ், பசை, வேஸ்ட் துணி, கொக்கிகள்... ஒரு மர ஷீட் 600 ரூபாய்க்கு வாங்கினா, அதுல 30 பெட்டிகள் வரை செய்யலாம். ஒரு பெட்டிக்கான மர ஷீட், மற்ற பொருள்கள் மற்றும் மர ஷீட்டை கார்பென்டர்கிட்ட கொடுத்து வெட்டி வாங்கற கட்டணம் உள்பட மொத்த முதலீடு 200 ரூபாய்.’’ எத்தனை...

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் !

பட்டுப்புழு வளர்ப்பில் அதிக லாபம் பெற இளம்புழு வளர்ப்பை வணிகரீதியில் கையாளும் நடைமுறை உதவுகிறது. பட்டுக்கூடு அறுவடை வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆரோக்கியமான மற்றும் திடகாத்திரமான இளம்புழுக்களே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. சரியான முறையில் அட்டை அடைகாப்பு, புழு வளர்ப்பு மனை மற்றும் சுற்றுப்புறங்களை கிருமிநீக்கம் செய்தல், இணக்கமான சுற்றுச்சூழல் மற்றும் சத்தான இலைகள் ஆகியவை ஆரோக்கியமான இளம்புழு வளர்ப்புக்கு அடிப்படைக் காரணிகளாகும். இளம்புழு வளர்ப்பு மையங்களில் விஞ்ஞான ரீதியில் இளம்புழுக்கள் வளர்க்கப்படுவதால், பட்டு விவசாயிகளுக்கு நல்ல அறுவடையைத் தரக்கூடிய ஆரோக்கியமான மற்றும் வலிமையான புழுக்களை வினியோகம் செய்ய முடிகிறது. மாதிரி இளம்புழு வளர்ப்பு மையம்: பட்டுக்கூடு விளைச்சலின் வெற்றி இளம்புழு வளர்ப்பில் அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகிறது. அதனால் இளம்புழு வளர்ப்பை பிரத்யேக புழு வளர்ப்பு மனையில்...

Saturday, February 9, 2013

படித்ததில் பிடித்தது

மதுரை மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி வழக்கமாய் காலை 9.30 மணிக்கு துவங்கும், ஆனால் 8 மணிக்கே ஒருவரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. அவர்தான் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட்(47). மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்து கொண்டுவந்த பாடபுத்தக குறிப்புகள் மற்றும் மதிய உணவு ஆகியவற்றை கொண்டு போய் தனது மேஜையில் வைத்துவிட்டு வெளியே வருகிறார். அடுத்த ஒரு மணி நேரம் அதாவது பள்ளி திறப்பதற்கு (காலை 9.30) அரை மணி நேரம் முன்புவரை, அவர் பம்பரமாக சுழன்று செய்யும் வேலைகள்தான் அவர் பற்றி இந்த கட்டுரை எழுத தூண்டுகோள். ஆமாம், கையில் ஒரு விளக்குமாறும், வாளி நிறைய தண்ணீரும் எடுத்துக் கொண்டு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையை...

மாடியில் காய்கறி தோட்டம்!

அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு, மாடியில் காய்கறி தோட்டம் அமைக்கும், என்.மாதவன்: நான், சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில், வெங்கடேஸ்வரா நர்சரி எனும், நாற்றங்கால் பண்ணை வைத்திருக்கிறேன்.அடுக்கு மாடி குடியிருப்புகளில், பூமியில் பயிரிடும் வாய்ப்பில்லை. ரோஜா, சாமந்தி, செம்பருத்தி என, பூச்செடியையும், சிலர் துளசி செடியை மட்டுமே, மண் தொட்டியில் செடிகளாக வளர்ப்பர்.வீட்டின் மொட்டை மாடியில், 200 சதுர அடி இடம் இருந்தால், பூமியில் விவசாயம் செய்வதை போல், காய்கறி தோட்டம் அமைத்து, நன்கு அறுவடை செய்யலாம். செடிகளுக்கு ஊற்றும் தண்ணீர் தேங்கி, மாடியின் உறுதி குறைவதை தடுக்க, மாடியில், "வாட்டர் புரூப் ஷீட்' ஒட்டி, காய்கறி தோட்டம் அமைப்பது அவசியம்.கூழாங்கற்களை, மூன்றங்குல உயரத்திற்கு பரப்ப வேண்டும். அதன் மேல் தேங்காய் நாரை பரப்பி, செம்மண், எரு உரம், ஆற்று மண் கலந்த, தோட்ட மண் கலவையை பரப்பி, எல்லாம் சேர்த்து,...

Friday, February 8, 2013

பீனிக்ஸ் பறவையாக எழுந்தோம்

''நாங்கள் சொந்த வீடு, கார், பைக், ஸ்கூட்டர் என சகல வசதிகளுடன்  சந்தோஷமாகத்தான் இருந்தோம். என் கணவர் லெதர் பொருட்கள் தயாரிப்பதற்கான ஜிப், எலாஸ்டிக், பட்டன் போன்ற உபரிப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருந்தார். டெல்லி, மும்பை என இந்தியா முழுக்க சென்று பிஸினஸ் செய்து வந்தார்.  நல்ல லாபகரமாகத்தான் இருந்தது. எந்தச் சிக்கலும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் மிக மோசமான காலகட்டமும் வந்தது. பிஸினஸை இன்னும் பெரிய அளவில் செய்ய ஆசைப்பட்டார் என் கணவர். அதற்காக எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அவரது பிஸினஸ் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி இலங்கை, மலேசியா என சென்று, பல கம்பெனிகளில் பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு அட்வான்ஸ் தொகையையும் செலுத்திவிட்டு வந்தார். ஆனால், பொருட்களும் வந்துசேரவில்லை; செலுத்திய பணமும் திரும்ப வரவில்லை. பல லட்சங்கள் நஷ்டம் உண்டாகி, கடனுக்கு...

Wednesday, February 6, 2013

ரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி

பூச்செடிகள் வளர்ப்பது மற்றும் அலங்கார மலர் தோட்டங்கள் அமைப்பது போன்றவற்றில் ஆர்வம் உள்ளவர்களின் முக்கியமான கவலை - பல வண்ணங்களில் பூக்கும் வித விதமான ரோஜா செடிகளை எப்படி வளர்த்து பராமரிப்பது என்பதுதான். மனம் மயக்கும் வாசனையுடன் விதவிதமான வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்பது சாதாரண விஷயமில்லை. எல்லா தோட்டக்கலை ஆர்வலர்களுமே ரோஜா செடியை வளர்ப்பு என்பது சிரமமான ஒன்று என்பதை ஒப்புக்கொள்கின்றனர். ஒல்லியான பலவீனமான தோற்றத்தை கொண்டுள்ள இந்த செடிக்கு தேவைப்படும் உபசரிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இருப்பினும் சிரமம் பார்க்காமல் விசேஷமாக கவனித்து கொள்ளும் பட்சத்தில் நமது தோட்டத்திலோ வாசலிலோ பல வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளுக்கு நாம் சொந்தக்காரர்கள் ஆகிவிடலாம். அதிலும் "தோட்டத்தை நல்லா வச்சிருக்கீங்க"...

மலட்டுத்தன்மை பிரச்னைக்கான தீர்வுகள்

மலட்டுத்தன்மை... பூதாகரமாக பயமுறுத்திக் கொண்டிருக்கிற இந்தப் பிரச்னைக்கான தீர்வுகள், அன்றாட வாழ்க்கையில் நாம் அலட்சியம் செய்கிற, அவமதிக்கிறசின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா?உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம். பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்? உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று. எண்ணெய் குளியல் என்றால் அதற்கென ஒரு முறை உண்டு. 1 குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 1 டீஸ்பூன் சீரகம், கால் டீஸ்பூன்...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites