இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Monday, November 17, 2014

சிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும் இதை செய்யலாம்

நாளொன்றுக்கு 40 லிட்டர் வரையிலும் பால் கொடுப்பதால் ஜெர்ஸி, சிந்து, எச்.எஃப். போன்ற கலப்பினப் பசுக்களை வாரி அணைத்துக் கொண்டவர்கள், 4 லிட்டர் மட்டுமே பால் தரும் நாட்டு மாடுகளை நிர்க்கதியாக்கி விட்டனர். நாட்டு மாடுகளிலிருந்து பால் உற்பத்தி பெரிதளவில் இல்லையெனினும், இம்மாடுகளின் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த ஈஸ்வரி.நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பிரதானமாகக் கொண்டு அர்க், ஷாம்பு, ஹேர் ஆயில், சோப்பு, சாம்பிராணி, ஃபேஷியல் பவுடர், பல்பொடி, டிஸ்வாஷ் பவுடர், விபூதி, வலி நிவாரணி என ஈஸ்வரி தயாரிக்கும் சிறுதொழில் பொருட்களுக்கு நல்ல...

நீங்க தான் முதலாளியம்மா!

‘அதிகம் படிக்கலை. பொழுதுபோக்கா ஆரி ஒர்க் கத்துக்கிட்டேன். 15 வயசுலேருந்து பண்ணிட்டிருக்கேன். பிசினஸா எடுத்துப் பண்ண ஆரம்பிச்ச பிறகு கல்பனாவும் என்கூட சேர்ந்தாங்க. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முழு நேரத் தொழிலே இதுதான்’’ என்கிறார் பவானி. ‘‘எம்பிராய்டரில எத்தனையோ வகை உண்டு. அதுல ஆரி ரொம்பவே ஸ்பெஷல். சில்க் காட்டன், சிந்தெடிக், நெட் துணினு எல்லா மெட்டீரியல்லயும் இந்த ஒர்க்கை பண்ண முடியும். பிளவுஸ், சுடிதார், லெஹங்கா, சேலைனு எதுல வேணாலும் போடலாம். இதுல 21 வகை  தையல் இருக்கு.  அவங்கவங்க தேவைக்கேத்தபடி காம்பினேஷனை மாத்திப் பண்ணலாம். அடிப்படை தையலோ,எம்பிராய்டரியோ தெரிஞ்சிருக்கணும்னு  அவசியமில்லை. ஆர்வமும் உழைக்கிற தைரியமும் இருந்தால்...

தோரணம்!

அளவில் சின்ன வீடு முதல், ஆடம்பர பங்களா வரை வாசலுக்குத் தோரணம் கட்டி அழகுப்படுத்தும் பழக்கம் எல்லோருக்கும் உண்டு. தோரணங்கள்  கட்டும் பழக்கமில்லாதவர்கள், அதையே சுவர்களை அலங்கரிக்கும் வால் ஹேங்கிங்காக உபயோகிக்கலாம். பெரிய முதலீடோ, உடலை வருத்தும்  உழைப்போ தேவையில்லாமல் சின்ன முதலீட்டில் தோரணம் தயாரிக்கும் பிசினஸை தொடங்கலாம் என்கிறார் சுதா செல்வக்குமார்.‘‘சாதாரண பேப்பர், ஹேண்ட் மேட் பேப்பர், சணல், ஓ.ஹெச்.பி ஃஷீட், பிளாஸ்டிக் பூக்கள், மணிகள், கிரிஸ்டல், மரம்னு எந்த மெட்டீரியல்ல  வேணாலும் தோரணம் பண்ணலாம். மரத்துல பண்றதானா, டிசைன் கொடுத்து வெளியில கட்பண்ணி வாங்கணும். மற்ற எல்லா மெட்டீரியல்களையும்  நாமளே வெட்டி டிசைன் பண்ணிடலாம்....

பனீர் தயாரிக்கும் முறை

பனீர் பிடிக்காத குழந்தைகளே இருக்க மாட்டார்கள். நொறுக்குத்தீனி முதல் டிபன், சாப்பாடு, சூப், ஸ்வீட் என எல்லாவற்றோடும் பொருந்திப் போகும்  பனீர். பால் பிடிக்காதவர்களுக்கும் பனீர் பிடித்துப் போவது ஆச்சரியம். பாலில் இருந்து பெறப்பட்டாலும், பனீரில் கொழுப்பு அறவே கிடையாது.  மனிதர்களின் புரதம் மற்றும் கால்சியம் தேவையை ஈடுகட்டுவதில் பனீருக்கு முக்கிய இடமுண்டு. இத்தனை நல்ல விஷயங்களை உள்ளடக்கிய  பனீர், கொஞ்சம் காஸ்ட்லியானது. அதோடு, கடைகளில் வாங்கும் பனீரை குறிப்பிட்ட நாட்களுக்குள் உபயோகித்துத் தீர்த்து விட வேண்டும்.  இதற்கெல்லாம் மாற்று வழி வைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சுஜாதா.‘‘எம்.எஸ்.சி., பி.எட். படிச்சிருக்கேன். ஸ்கூல்ல டீச்சரா...

Saturday, November 8, 2014

பஞ்சகவ்யாவில் பளீரிடும் பன்னீர் திராட்சை...!

'இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு, தானாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் வந்துவிடும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள். இக்கருத்தை 'உண்மை’ என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயச் சகோதரர்கள் கே.ஆர். சதாசிவம் மற்றும் கே.ஆர். மாறன். இவர்கள், இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்கள். சிறுவாணிக் காற்று சிலுசிலுக்கும் இளமாலைப் பொழுதொன்றில், மேற்குத்தொடர்ச்சிமலைச் சாரலில் இருக்கும் உடன்பிறப்புக்களின் பண்ணையில் நுழைந்தோம். கண் ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் கல்பந்தலுக்குள்...

ஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா!

'வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’, 'பக்பக்பக் மாடப்புறா...’ இப்படியாக அன்று தொட்டு இன்றுவரை புறாவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. மணிப்புறா, மாடப்புறா, கோயில் புறா என்று அவற்றில் பல ரகங்கள் உண்டு. பெரும்பாலும், புறாக்களை அழகுக்காகத்தான் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால், ''அழகுக்காக மட்டுமில்லை... ஆதாயத்துக்காகவும் புறா வளர்க்கலாம்'' என்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் புத்தரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆர்.கே. மைதீஷ்குமார். பணம் கொட்டும் பரம்பரைத் தொழில்! 'பக்...பக்...பக்...' என்று மைதீஷ்குமார் குரல்கொடுக்க, கூண்டுக்குள் இருந்து வெளிப்பட்ட புறாக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவர் வீசிய தீனியைக் கொத்திக்கொண்டிருந்த...

நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு நாய் வளர்ப்பு!

சிப்பிப்பாறை... கன்னி... கேரவன்... செல்லப்பிராணி என்றாலே 'சட்’டென நினைவுக்கு வருவது, நாய்தான். ரகம் ரகமாக வெளிநாட்டு நாய்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும், எப்போதுமே நம்நாட்டு ரக  நாய்களுக்கு தனி மவுசு உண்டு. காரணம், அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதோடு, கொஞ்சம் பழக்கினால், வேட்டை, காவல் போன்ற பணிகளிலும் ஈடுபடுத்த முடியும். குறிப்பாக, தமிழ்நாட்டில், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை,   கன்னி போன்ற நாட்டு ரக நாய்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு ரக நாய்களை வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார், ஜான் ஆர்தர். திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள மாறாந்தை எனும் ஊரில் 'டேவிட் ஃபார்ம்’...

ஆண்டு முழுவதும் ஒரே விலை!.

தக்காளியைத் தகதகக்க வைக்கும்...மதிப்புக் கூட்டல் மகாத்மியம்.. மதிப்புக் கூட்டல்  எஸ். ராஜாசெல்லம்  பளிச்... பளிச்... விலை குறையும் நேரங்களில் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். ஆண்டு முழுவதும் கிலோவுக்கு 30 ரூபாய்.  ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாய் வரை அதிகரிப்பதும்... அடுத்த சில வாரங்களிலேயே 'தரை ரேட்' எனும் அளவுக்கு சடாரென சரிந்து, கிலோ 50 பைசாவுக்குகூட கொள்முதல் செய்ய ஆள் இல்லாத நிலை ஏற்படுவதும்... தக்காளி விவசாயத்தில் பல ஆண்டுகளாகவே வாடிக்கையான விஷயமாகிவிட்டது! பறிப்புக் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத நிலையில், தக்காளியைக் கூடை கூடையாகக் குப்பையில் கொட்டுவதும், தக்காளித் தோட்டங்களில் அப்படி அப்படியே ஆடு, மாடுகளை மேய...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites