நாளொன்றுக்கு 40 லிட்டர் வரையிலும் பால் கொடுப்பதால் ஜெர்ஸி, சிந்து, எச்.எஃப். போன்ற கலப்பினப் பசுக்களை வாரி அணைத்துக் கொண்டவர்கள், 4 லிட்டர் மட்டுமே பால் தரும் நாட்டு மாடுகளை நிர்க்கதியாக்கி விட்டனர். நாட்டு மாடுகளிலிருந்து பால் உற்பத்தி பெரிதளவில் இல்லையெனினும், இம்மாடுகளின் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த ஈஸ்வரி.நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பிரதானமாகக் கொண்டு அர்க், ஷாம்பு, ஹேர் ஆயில், சோப்பு, சாம்பிராணி, ஃபேஷியல் பவுடர், பல்பொடி, டிஸ்வாஷ் பவுடர், விபூதி, வலி நிவாரணி என ஈஸ்வரி தயாரிக்கும் சிறுதொழில் பொருட்களுக்கு நல்ல...