இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 29, 2012

எந்த ஊரில் என்ன வாங்கலாம்



ந்த கொண்டாட்டமாக இருந்தாலும் அதை மறக்க முடியாத நாளாக மாற்றுவதில் புத்தாடைகளுக்கு முக்கியமான இடம் உண்டு. இப்போதெல்லாம் பண்டிகைக் காலங்கள் என்றுதான் இல்லை; கையில் காசு இருந்தால் கலர் கலரா, டிசைன் டிசைனா ஆடைகளை எடுத்துப்போட்டு அழகு பார்க்கும் ஆர்வம் எல்லோருக்குமே வந்துவிட்டது. காலத்துக்கு ஏற்ப புதுசு புதுசா பல மாடல்களில் ஆடைகள் வந்தவண்ணமும் இருக்கின்றன.
மனதுக்குப் பிடித்த ஆடைகளை குறைந்த விலையில் எங்கே வாங்கலாம் என்பதுதான் ஆடைப் பிரியர்களின் தேடலாக இருக்கிறது. அத்தகைய தேடலுக்குத் தீர்வு தரும் இடங்களில் முதன்மையாக இருப்பது சென்னை வண்ணாரப்பேட்டை. சின்னக் குழந்தைக்குத் தேவையான ஜட்டியிலிருந்து பெரியவர்களுக்குத் தேவையான ஆடைகள் வரை அனைத்தும் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு மார்க்கெட்டில் கிடைக்கும். கடந்த முப்பது வருடங்களாக இங்கு துணிக் கடை நடத்திவரும் சந்திரசேகரிடம் பேசினோம்.
'கடந்த நூறு வருடங்களாக இங்கு ஜவுளி வியாபாரம் நடந்துட்டு வருது. ஆரம்பத்துல ஜவுளி வியாபாரம் சிறுதொழிலா ஆரம்பிக்கப்பட்டு இப்ப பெரிய அளவுல வளர்ந்திருக்கு. இங்க மொத்தமாகவும் சில்லறையாகவும் வியாபாரம் செய்கிறோம். இங்கிருந்து சென்னை தி.நகர், புரசைவாக்கம் போன்ற சென்னை பகுதி கடைகள் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கும் துணிகள் சப்ளை செய்கிறோம். தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளா, புதுச்சேரிக்கும் சப்ளை செய்கிறோம்.

சூரத், பாம்பே, கொல்கத்தா, திருப்பூர் என்று துணிகளை உற்பத்தி செய்யும் இடங்களுக்கே சென்று வாங்குகிறோம். இடைத்தரகர்கள் இல்லாததால் மிக குறைவான விலைக்கே எங்களால் வியாபாரம் செய்ய முடியுது. இங்கே 80 ரூபாயிலிருந்துகூட புடவை கிடைக்கும். பூனம், பேப்பர் காட்டன், பப்பாளி காட்டன் புடவைகளை 150 ரூபாயிலிருந்து வாங்கலாம்.
ஆண்களுக்கான சட்டை 100 ரூபாயிலிருந்தும், இளம் பெண்கள் விரும்பும் அனார்கலி, ரசக்களி டிரெஸ்களை 500 ரூபாயிலிருந்தும் வாங்கலாம்.  அது மட்டுமல்லாமல் தீபாவளி மாதிரியான பண்டிகைகளுக்குத் தள்ளுபடியும் கொடுக்கிறோம்.
திருமணம் போன்ற விசேஷங்களுக்காக  மொத்தமா வாங்க வர்றவங்கதான் அதிகம். ஏன்னா, வேற இடத்துல ரெண்டு பேருக்கு வாங்குறப் பணத்துல இங்க நாலு பேருக்குத் துணி வாங்கிடலாம். வாங்கிட்டுப் போன துணி பிடிக்கலைன்னாவோ, டேமேஜ் இருந்தாலோ 15 நாட்களுக்குள் திருப்பிக் கொண்டுவந்தால் மாற்றியும் கொடுத்துவிடுவோம். சிட்டியில எத்தனை பிரமாண்டமான கடைகள் ந்தாலும் வண்ணாரப்பேட்டைக்குன்னு ரு மவுசு இருக்கவே செய்யுது.
 
காலையில ஏழு மணிக்கு கடை  திறந்தா இரவு 11 மணிக்குதான் மூடுவோம். சில பண்டிகை நாட்களில் இரவு ஒருமணிவரைகூட ஆகிவிடும். பெண்களுக்கான சுடிதாரை விரும்புகிற டிசைனுக்கேற்ப ஒரு மணி நேரத்தில் தைத்தும் கொடுக்கிறோம். ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் புழங்கக்கூடிய வண்ணாரப்பேட்டை, இப்போது எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் ஜவுளிக் கடலாக மாறியுள்ளது'' என்றார்.
சென்னையில் இருப்பவர்கள் பெரும்பாலும் வண்ணாரப்பேட்டையை தங்கள் சாய்ஸாக வைத்திருப்பார்கள். வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருகிறவர்களும் வேலையோடு வேலையாக வண்ணாரப்பேட்டைக்கும் ஒரு விசிட் அடித்து வகை வகையான ஆடைகளை வாரிச் செல்லலாமே!
    - பி.செ.விஷ்ணு,
படங்கள்: த.ரூபேந்தர்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites