இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Tuesday, January 5, 2016

பந்தல் சாகுபடியில் நவீனம்

காந்திகிராமம்:பந்தல் காய்கறிகள் சாகுபடியில் புதிய 'பெட் ஒயர்' தொழில் நுட்பத்தை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.காய்கறிகள் உற்பத்தியில் பந்தல் தொழில் நுட்பம் புதிய முறை. இதில் கட்டுக் கம்பிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.68க்கு விற்பனையாகும் கட்டுக்கம்பிகள் ஏக்கருக்கு 400 கிலோ தேவைப்படும். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.27 ஆயிரத்து 200 செலவாகிறது.
"Enter your caption here"
விவசாயிகள் கம்பிகளுக்கு மட்டுமே கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுதவிர பந்தல் அமைப்பதற்கான வேலிக்கருங்கற்கள், சொட்டுநீர் பாசனத்திற்கான வசதிகள், தெளிப்பான்கள், பறவை வலை உள்ளிட்டவைகளுக்கு அதிக பணம் 
"Enter your caption here"
செலவாகிறது. இதனால் பந்தல் காய்கறிகள், திராட்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.இதனை ஆய்வு செய்த காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் 'பெட் ஒயர்' எனும் புதிய தொழில் நுட்பத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தியது. ஆய்வுக்காக பல்கலையின் வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் 'பெட் ஒயர்' தொழில் நுட்பத்தில் பீர்க்கங்காய் பந்தல் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் பந்தல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ 'பெட் ஒயர்' பயன்படும். ஒரு கிலோ 'பெட் ஒயர்' ரூ.150க்கு கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவாகிறது. இதன்மூலம் ரூ.15 ஆயிரம் சேமிக்கப்படுகிறது.அத்துடன் 200 கிலோ மீட்டர் வேகத்துடன் அடிக்கும் காற்று, கொட்டித் தீர்க்கும் மழையால் இந்த பெட் ஒயர் துருப்பிடிப்பதும் இல்லை.
வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் செந்தில்குமார் கூறியதாவது: பந்தல் காய்கறிகள் சாகுபடியில் சிறந்த பயனை 'பெட் ஒயர்' தொழில்நுட்பம் வழங்கியுள்ளது. மழை, வெப்பம் என மாறிய தட்பவெப்ப நிலையிலும் துருப்பிடிக்காமலும், சேதாரம் ஆகாமலும், திறன் குறையாமலும் உள்ளது. விவசாயிகள் தாராளமாக பயன்படுத்தலாம், என்றார்.

வாழை சாகுபடியில் பெட்
ஒயரின் பங்களிப்பு :


1. சூறாவளி காற்றிலிருந்து பாதுகாப்பு.
2. ஒரு ஏக்கருக்கு 30 kg பெட் ஒயர் 
மட்டுமே போதுமானது. 
3. ஒரு ஏக்கருக்கு ஒயர் ரூ 6,000 மற்றும் 
கட்டுவதற்க்கான செலவுகள் 
ரூ 10,000 மொத்தம் ரூ 16,000. 
4. 220 கிலோ மீட்டர் காற்றின் வேகத்தை
தாங்கக் கூடியது. 
5. அதிகபடியான எடையும் தாங்கக்கூடியது.
6. ஒரு ஏக்கருக்கு ரூ 35,000 வரை சேமிப்பு . 
7. சுற்று சூழலுக்கு பாதுகாப்பானது. 
8. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது.
9. பலமுறை உபயோகப் படுத்தலாம்.
10. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 
பெட் ஒயர் பாதுகாப்பில் அதிக மகசூல்
மற்றும் இலாபம் அடைந்திருக்கிறார்கள்.

பெட் ஒயர் சிறபியல்புகள் :

1. தோட்டபயிர்களான பீர்கங்காய்,
புடலங்காய்,பாகற்காய்,அவரை மற்றும் 
சுரக்காய் போன்ற காய்கறி பயிர்களுக்கு 
பந்தல் அமைத்து சாகுபடி செய்தால்
அதிகப்படியான மகசூல் பெறலாம்.
2. பெட் ஒயர் கொண்டு பந்தல் அமைத்தல்
எளிய முறையில் வழுவான ,மிக குறைந்த 
செலவில் செய்யக் கூடியது.
3. பெட் ஒயர் பலவிதமான காற்றையும், 
அதிக வெப்பத்தையும்,மேலும்
எடையையும் தாங்கக் கூடியது.
4. ஒரு ஏக்கருக்கு காய்கறி பந்தல்
அமைக்க 85 kg பெட் ஒயர் மட்டுமே போதும்.
5. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்
பெட் ஒயர் பாதுகாப்பில் அதிக மகசூல் 
மற்றும் இலாபம் அடைந்திருக்கிறார்கள்.
6. பலமுறை உபயோகப்படுத்தலாம்.
7. பூச்சி மருந்தின் தாக்கம் ஏதுமில்லை.

தொலைபேசி :

+91 4324 250160

விற்பனையாளர் :

+91 96557 11928


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites