இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, February 27, 2012

மெழுகு பொம்மை தயாரிப்பது எப்படி

பார்த்த நொடியில் கவனம் ஈர்க்கின்றன சாந்தி செய்கிற மெழுகு பொம்மைகள். பரிசளிக்கவும் அலங்காரமாக வைக்கவும் ஏற்ற வகையில் மிக்கி மவுஸ், பிள்ளையார் என விதம்விதமான உருவங்களில் அசத்துகின்றன அத்தனையும். குறைந்த முதலீடும் குறைந்த நேர உழைப்பும் தேவைப்படுகிற மெழுகு பொம்மை தயாரிப்பு, வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கும் பெண்களுக்குக் கணிசமான லாபம் தரும் என்கிறார் சாந்தி.

‘‘ஒரு எக்சிபிஷன்ல இதே மாதிரி பொம்மைகளைப் பார்த்தேன். அதைப் பண்றவங்களைத் தேடிக் கண்டுபிடிச்சுக் கத்துக்கிட்டேன். வீட்டுக்கு வர்றவங்களுக்கு அதை அன்பளிப்பா கொடுக்க ஆரம்பிச்சேன். அதைப் பார்த்துட்டு பிறந்த நாள் பார்ட்டில கொடுக்கிறதுக்கும், கொலுவுக்கும் மொத்தமா ஆர்டர் வர ஆரம்பிச்சது. அப்படியே வளர்ந்து, இன்னிக்கு கடைகளுக்கும் சப்ளை பண்றேன். இதைச் செய்யறது ரொம்ப சிம்பிள். பெரிய உடலுழைப்பு தேவையில்லை. ஆனா, திருப்தியான லாபம் நிச்சயம்’’ என்கிறவர், இந்த பிசினஸில் இறங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை?
முதலீடு?
‘‘பாரஃபின் வாக்ஸ் சிப்ஸ்
(1 கிலோ & 70 ரூபாய்), மெட்டல் மோல்டு (ஆயிரம் ரூபாய்), பொம்மையை அலங்கரிக்க கண், மூக்கு (1 பாக்கெட் & 5 ரூபாய்), வாக்ஸ் கலர் (1 பாக்ஸ் & 10 ரூபாய்). பேக்கிங் செய்ய பிளாஸ்டிக் ஷீட் (ஒன்று & 1 ரூபாய்).
மோல்டுக்கான செலவுதான் கொஞ்சம் அதிகம். ஆனா, அது ஒரே முறை முதலீடுதான். முதல் முறை தொழில் தொடங்கறப்ப 1,500 ரூபாய் முதலீடு போட்டா போதும்.’’

லாபம்? விற்பனை வாய்ப்பு?
‘‘ஒரு கிலோ மெழுகில் 100 பொம்மைகள் செய்யலாம். 2 மணி நேரத்தில் இதைச் செய்து விடலாம். ஒரு பொம்மையை 10 ரூபாய்க்கு விற்கலாம். கடைகளில் அதை 20 ரூபாய்க்கு விற்கிறார்கள்.’’

பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 300 ரூபாய்.’’

-சாந்தி

Contact: 91-44-42209191 Extn:2234

பூசு மஞ்சள் தயாரிப்பது எப்படி

பருவ வயதில் அடியெடுத்து வைக்கும்போதே பரு...
முகம், கை, கால் என உடலெங்கும் தேவையற்ற ரோம வளர்ச்சி...
பொலிவோ, பள பளப்போ இல்லாத சருமம்...
இன்றைய தலை முறைப் பெண்கள் பலருக்கும் இருக்கும் இந்தப் பிரச்னைகள், அந்தக் காலத்துப் பெண்களுக்கு இருந்ததில்லை. காரணம், தினசரி வாழ்க்கையில் அவர்கள் பின்பற்றிய மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கம். காணாமல் போன பல பாரம்பரியங்களில் மஞ்சள் தேய்த்துக் குளிப்பதும் ஒன்றாகி விட்டது. மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள்.
‘‘இளம் பெண்கள் மஞ்சளைத் தவிர்க்கக் காரணம், பளீர்னு தெரியற அந்த கலர். பார்க்கிறவங்க கிண்டல் பண்ணுவாங்களேங்கிற தயக்கம்தான் அவங்களைத் தடுக்குது. கஸ்தூரி மஞ்சள் தடவினா, மஞ்சள் பூசினதே தெரியாது. சரும நோய்களும் அண்டாது. இதை எடுத்துச் சொல்லி, பலரை பூசிக்க வச்சேன். இப்ப வாடிக்கையாளர்கள் லிஸ்ட்ல எனக்கு இளம்பெண்கள் அதிகம்’’ என்கிறார் கண்ணம்மா. குழந்தைகளுக்கும் இளம் பெண்களுக்குமானது, கொஞ்சம் வயதான பெண்களுக்கானது என இரண்டு வித பூசு மஞ்சள் தூள் தயாரிக்கிறார் இவர். விருப்பமுள்ளோருக்குக் கற்றுக் கொடுத்து, தொழில் தொடங்க வழிகளையும் காட்டுகிறார்.

எப்படி ஆரம்பம்?
‘‘பூர்வீகம் மதுரை. வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சுதான் உபயோகிச்சு பழக்கம். சென்னைக்கு வந்தும்கூட அங்கருந்து மஞ்சள் தூள் இடிச்சு கொண்டு வந்துதான் யூஸ் பண்ணிட்டிருந்தேன். கடைகள்ல வாங்கற மஞ்சள் தூள் சருமத்துல எரிச்சலை உண்டாக்கறதாகவும், வெள்ளைப்புள்ளிகளை ஏற்படுத்தறதாகவும் நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கேன். அப்ப நாங்க தயார் பண்ணினதை சாம்பிள் கொடுத்துப் பார்த்ததுல, எல்லாருக்கும் திருப்தி. அப்படியே ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்க, அதையே பிசினஸா ஆரம்பிச்சாச்சு.’’
என்ன ஸ்பெஷல்?
‘‘பிறந்த குழந்தை நிறம் கம்மியா இருந்தாகூட, கஸ்தூரி மஞ்சள் தேய்ச்சுக் குளிப்பாட்டுவாங்க கிராமங்கள்ல. தேமலைப் போக்கி, கரும்புள்ளி, வெண்புள்ளிகளை நீக்கி, சரும நோய்கள் வராமத் தடுக்கிற குணம் அதுக்கு உண்டு. ‘மஞ்சள் பூசணும்... ஆனா, அது தெரியக்கூடாது’னு நினைக்கிற இளம் பெண்களுக்கு ஏற்றது. கூடவே வெட்டிவேர், பூலாங்கிழங்கு சேர்த்து அரைக்கிறதால, ரோம வளர்ச்சியும் இருக்காது.’’
பிசினஸ் வாய்ப்பு, லாபம் மற்றும் பயிற்சி?
‘‘ஒரு நாள் பயிற்சில நல்ல மஞ்சளைத் தரம் பிரிச்சுக் கண்டுபிடிக்கிறது, பதப்படுத்தி, என்னென்ன சேர்த்து அரைக்கிறது, எப்படி மார்க்கெட் பண்றதுங்கிற விவரங்களைக் கத்துக்கலாம். கட்டணம் 150 ரூபாய். 100 கிராம் 22 ரூபாய் வரைக்கும் விற்கலாம். ஒரு கிலோவுக்கு 70 ரூபாய் வரைக்கும் லாபம் நிச்சயம். 1 ரூபாய் பாக்கெட்டா போட்டு கடைகள், கோயில்கள்ல கொடுத்தாலும் லாபம் அதிகம் பார்க்கலாம்.’’

-கண்ணம்மா

Contact: 91-44-42209191 Extn:2234

மின்சாரக் குத்துவிளக்கு

இது இன்ஸ்டன்ட் உலகம். விரல் நுனியில், ரிமோட்டில் அலுங்காமல் குலுங்காமல் எந்தச் சாதனத்தையும் இயக்கலாம் இன்று. அந்த
வரிசையில் லேட்டஸ்ட்...ஸ்விட்ச் போட்டால் ஒளிரக்கூடிய தீபங்கள் மற்றும் குத்து விளக்குகள். எண்ணெய்
பிசுக்கு போக விளக்கைத் தேய்க்க நூலில் திரி தயாரிக்கவோ, விளக்கேற்றவோ மெனக்கெட வேண்டியதில்லை இன்றைய பெண்கள்.
ஸ்விட்சை தட்டினால், திரி வைத்து,எண்ணெய்  ஊற்றிப் பற்ற வைத்தது போல ஜெகஜோதியாக மின்னும் விளக்குகள் விற்பனைக்கு வந்து
விட்டன. மொத்தவிலையில் விளக்குகளை வாங்கி, அவற்றில் பல்பும் ஒயரும் பொருத்தி, மின்சாரத்தில் எரியும் வகையில் தயார் செய்து
விற்பனை செய் வதே முழுநேரத்தொழில் சென்னையைச் சேர்ந்த சந்திராவுக்கு. தனக்குத் தெரிந்ததைக் கற்றுக்கொடுத்து,தொழில் தொடங்க

ஆலோசனைகளும்சொல்கிறார் அவர்.‘‘சொந்தக்காரங்ககிட்ட கத்துக்கிட்டேன். பித்தளை, ஒயிட் மெட்டல், தேவைப்பட்டா வெள்ளின்னு
எதுல வேணாலும் இந்த விளக்குகளை ரெடி பண்ணலாம். சின்னதா காமாட்சி விளக்கு, தாமரைப்பூ விளக்கு, பஞ்சமுக விளக்கு, 3 அடுக்கு

கொண்டது, 5 அடுக்கு கொண்டதுனு இதுல நிறைய வகை இருக்கு. இந்துக்களுக்கு திரி விளக்கு மாதிரியும், கிறிஸ்தவர்களுக்கு மெழுகுவர்த்தி

எரியற மாதிரியும் அவங்கவங்க தேவைக்கேற்ப பண்ணலாம்’’ என்கிறார் சந்திரா.
தேவையான பொருட்கள் மற்றும் முதலீடு?
‘ ‘மொத்தவிலைக் கடைகள்ல விளக்குகள் வாங்கலாம். ஆரம்பத்துல ஒவ்வொரு மாடல்ல ஒரு விளக்கு வாங்கினா போதும்.
ஒயரிங் செய்ய ஓட்டை போடறதுக்கான மிஷின், ஒயர், ஒட்டறதுக்கான பசை, பல்பு எல்லாம் தேவை. விளக்கோட சேர்த்து முதல்ல 2,500
ரூபாய் முதலீட்டாய் போதும்.’’
விற்பனை வாய்ப்பு மற்றும்  லாபம்?
‘‘பாத்திரக்கடைகள், நகைக் கடைகள்ல விற்பனைக்குக் கொடுக்கலாம். நவராத்திரி நேரத்துல வீடுகள்ல நிறைய விற்பனையாகும்.
கல்யாணம், கிரஹப்பிரவேசம்னு எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்க ஏற்றது. அளவைப் பொறுத்து 150 ரூபாய் லேர்ந்து விற்க
லாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சி. ஒரு விளக்கு செய்யறதுக்கான பொருட்களோட சேர்த்து 250 ரூபாய்  கட்டணம்.பொருள்கள் இல்லாம பயிற்சிக்கு
மட்டும் 100 ரூபாய் .’’

ரெக்சின் பை தயாரிப்பது எப்படி


சாதாரண பர்ஸில் ஆரம்பித்து, கைப்பை, பயணப்பை என எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பலரும் உபயோகிப்பது ரெக்சினால் செய்யப்பட்டவற்றையே... விலை அதிகம், விலங்குகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படுவது எனப் பல காரணங்களுக்காக தோல் பைகளைத் தவிர்ப்பவர்களுக்கும் ரெக்சின் பைகளே சரியான மாற்று!
ரெக்சின் பைகள் தைத்து விற்பனை செய்வதையே முழு நேரத் தொழிலாகச் செய்கிறார் விழுப்புரம் மாவட்டம் கெடிலத்தைச் சேர்ந்த பேபி மலர். 'பத்தாவது படிச்சிருக்கேன். மேல படிக்க வசதியில்லை. ஏற்கனவே தையல்ல ஆர்வம் இருந்ததால, ரெக்சின் பை தைக்க கத்துக்கிட்டேன். பேங்க் லோன் போட்டு, அதையே ஒரு பிசினஸாவும் ஆரம்பிச்சு நடத்திட்டிருக்கேன். பர்ஸ், ஸ்கூல் பை, ஆபீஸ் பை, மார்க்கெட் பைனு பல மாடல்கள் பண்றேன். எல்லா நாளும், எல்லா மக்கள்கிட்டயும் வரவேற்பு உள்ள பிசினஸ் இது. சுலபமா கத்துக்கிட்டு, குறைஞ்ச முதலீட்டுல ஆரம்பிக்க ஏற்ற தொழிலும்கூட’’ என்கிற பேபி, கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு அதற்கான வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘ரெக்சின் (குவாலிட்டிக்கேத்தபடி நாலஞ்சு வெரைட்டில கிடைக்குது), ரன்னர்னு சொல்ற ஜிப்புக்கு இடையில வர்ற பாதை, ஜிப், நூல், கிளிப், தையல் மிஷின்...
தையல் மிஷினோட சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்!’’

 எத்தனை மாடல்கள்? என்ன விலை?

‘‘ஏற்கனவே சொன்ன மாதிரி கைக்கு அடக்கமான பர்ஸ்லேர்ந்து, குழந்தைங்களுக்கான லஞ்ச் பேக், புத்தகப்பை, காய்கறி வாங்கக் கொண்டு போகிற பை, ஆபீஸ் உபயோகத்துக்கு, வெளியூர் போகிறப்ப கொண்டு போக.... இப்படி
எத்தனை மாடல் வேணாலும் பண்ணலாம். சின்ன சைஸ் மார்க்கெட் பையை 60 ரூபாய்க்கும், புத்தகப்பையை 120 ரூபாய்க்கும் விற்கலாம். பையோட சைஸைப் பொறுத்து விலையை நிர்ணயம் பண்ணிக்கலாம். கடைகள்ல கிடைக்கிறதைவிட பத்து ரூபாய் குறைவா கொடுக்கிறது மூலமா நிறைய ஆர்டர்களை பிடிக்க முடியும். எந்த சைஸ் பைலயும் 30 சதவிகித லாபம் நிச்சயம்!’’

ஒரு நாளைக்கு எத்தனை பை?

‘‘ஒரே ஒரு தையல் மிஷின் வச்சுக்கிட்டு, உதவிக்கு ஆளில்லாம தைக்கிறவங்க 4 பைகள் தைக்கலாம்.’’

பயிற்சி..?

‘‘ஒரு வாரப் பயிற்சில 5 மாடல் பைகள் கத்துக்கலாம். 3 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மெட்டீரியலோட சேர்த்துக் கட்டணம்
5 ஆயிரம் ரூபாய்.’’
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என ஆசையைத் தூண்டுகின்றன சித்ரா லிங்கேஸ்வரன் கைவண்ணத்தில் உருவாகிற பைகள். அத்தனையும் குட்டீஸ் ஸ்பெஷல்! குழந்தைகளுக்குப் பிடித்த கார்ட்டூன் உருவங்களில் பலவித பைகள் செய்வதில் நிபுணியான சித்ரா, தனக்குத் தெரிந்த இத்தொழிலை மற்றவர்களுக்குக் கற்றுத்
தரவும், தொழிலாகத் தொடங்க வழிகாட்டவும் தயாராக இருக்கிறார்.
‘‘பி.காம் படிச்சிருக்கேன். பொம்மைகள் ரொம்பப் பிடிக்கும். முதல்ல பொம்மைகள் செய்யக் கத்துக்கிட்டேன். பொம்மை வடிவத்துலயே குழந்தைகளுக்கான பைகள் வர ஆரம்பிச்சதும், அதையும் செய்து பார்த்தேன். பெரியவங்களுக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரியே இதை குழந்தைங்களுக்கும் ஒரு விளையாட்டான பயிற்சியா கத்துக் கொடுக்கலாம். கைத்தொழில் கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு. பொழுதுபோக்கும் கூட’’ என்கிறவருக்கு 150 மாடல்களில் பொம்மைகளும், இருபதுக்கும் மேற்பட்ட மாடல்களில் பைகளும் செய்யத் தெரியுமாம்.
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘ஃபர் கிளாத், முகங்கள், ஜிப், லைனிங் துணி, மாட்டிக்கிறதுக்கான வார், ஊசி, நூல்... பைகளை தையல் மிஷின்லயும் தைக்கலாம். இல்லாதவங்க கைகளாலயும் தைக்கலாம். 5 மாடல் பைகளுக்கு 500 ரூபாய் முதலீடு இருந்தா போதும்.’’
என்ன ஸ்பெஷல்?
‘‘மிக்கி மவுஸ், நாய், பூனைனு குழந்தைங்களுக்குப் பிடிச்ச எந்த உருவத்துலயும் பைகள் பண்ணலாம். பள்ளிக்கூடம் போக அடம்பிடிக்கிற குழந்தைங்க கூட இந்தப் பைகளைக் கொடுத்தா, சமர்த்தா கிளம்பிடுவாங்க. காலேஜ் போறவங்களுக்கு இதுலயே இதய வடிவ மாடல் இருக்கு. தவிர குட்டிக்குட்டி பர்ஸ், பொம்மை வச்ச செல்போன் பவுச் எல்லாமும் பண்ணலாம்.’’
லாபம் மற்றும்
வர்த்தக வாய்ப்பு?
‘‘ஒரு பை தைக்க அதிகபட்சம் 2 மணி நேரம். முழுநேரமும் இதுக்காகவே செலவிட்டா, ஒரு நாளைக்கு 15 பைகள் வரை பண்ணலாம். சின்ன சைஸ் பை செய்ய 75 ரூபாய் செலவாகும். அதை 150 ரூபாய்லேர்ந்து விற்கலாம். செல்போன் பவுச் செய்ய 15 செலவானா, 50 ரூபாய்க்கு விற்கலாம். குழந்தைங்களுக்கு பிறந்த நாளைக்கு அன்பளிப்பா கொடுக்க ஏற்றது. கடைகளுக்கும் சப்ளை பண்ணலாம்.’’
பயிற்சி?
‘‘2 நாள் பயிற்சில 4 மாடல்கள் கத்துக்க 250 ரூபாய் கட்டணம். 1 வாரப் பயிற்சில 20 மாடல்கள் கத்துக்க 1000 ரூபாய் கட்டணம்.’’
RRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRRR
புதிய பார்வையும் வித்தியாசமான சிந்தனையுமே எந்தத் தொழிலின் வெற்றிக்கும் அடிப்படை. அதை நிரூபித்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹேமா. டெய்லரிங் மட்டுமே செய்து வந்த இவருக்கு, போட்டி நிறைந்த அந்தத் துறையில் பெரிய வருமானம் இல்லை. என்ன செய்தால் ஏற்றம் வரும் என யோசித்த வேளையில் கண்களில் பட்டிருக்கிறது அட்சதை பை. இன்று விதம் விதமான பைகள் தைத்து விற்பதில் எக்கச்சக்க பிஸி ஹேமா.

‘‘பெரிய வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். மணமக்கள் மேல தூவ அட்சதை அரிசி கொடுப்பாங்க இல்லையா? அந்தக் கல்யாணத்துல குட்டிக் குட்டி பை கொடுத்தாங்க. அந்தப் பைக்குள்ள அட்சதை அரிசி, பூ எல்லாம் போட்டிருந்தாங்க. ஒரு அரிசிகூட வீணாகாம, அழகா பேக் பண்ணிருந்தாங்க. அட்சதையை போட்டுட்டு, எல்லாரும் அந்தப் பையை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறதைப் பார்த்தேன். அதுதான் இன்ஸ்பிரேஷன்.
நவராத்திரிக்கு வீட்டுக்கு வந்தவங்களுக்கு குட்டிக்குட்டியா தாம்பூலப்பை தச்சு, அதுக்குள்ள மஞ்சள், குங்குமம், அன்பளிப்புப் பொருள்களை வச்சுக் கொடுத்தேன். பாராட்டாத ஆளே இல்லை. ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிக்க, அதுவே இன்னிக்கு எனக்கு முழு நேர பிசினஸாயிடுச்சு’’ என்கிற ஹேமா, இந்த வகை பைகள் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
எத்தனை வெரைட்டி?
‘‘அட்சதை போட்டுக்கொடுக்கிற குட்டிப்பை, தாம்பூலப்பை, நகைக் கடைகள்ல நகைகள் போட்டுக் கொடுக்கிற பை, சாக்லெட் போட்டுக் கொடுக்கிற சுருக்குப்பை, அன்பளிப்பு பை, லஞ்ச் பை... இப்படி நிறைய உண்டு.’’
என்னென்ன தேவை? முதலீடு?
‘‘தையல் மெஷின் இருந்தா நல்லது. இல்லாட்டாலும் கையால தைக்கலாம். தேவையைப் பொறுத்து விதம்விதமா சாட்டின், ஜரிகை வச்சது, டிஷ்யூ... இப்படி வெரைட்டியான துணிகள், அலங்காரப் பொருள்கள்... எல்லாம் சேர்த்து 500 ரூபாய் முதலீடு இருந்தா போதும்.’’
விற்பனை வாய்ப்பு மற்றும் லாபம்?
‘‘பையோட அளவையும் மெட்டீரியலையும் பொறுத்து 10&20 ரூபாய்லேர்ந்து 500 ரூபாய் வரைக்கும்கூட விற்கலாம். கல்யாண கான்டிராக்டர்கள்கிட்ட பேசி, அட்சதை பை, தாம்பூலப்பைகளுக்கு மொத்தமா ஆர்டர் எடுக்கலாம். ஸ்கூல் குழந்தைங்களுக்கும் வேலைக்குப் போறவங்களுக்கும் லஞ்ச் பை தச்சுக் கொடுக்கலாம். நவராத்திரி சீசன்ல வெத்தலை, பாக்கு வச்சுக் கொடுக்கிறப்ப, இந்த மாதிரி பைகள்ல அன்பளிப்புகள் போட்டுத் தந்தா நல்லாருக்குங்கிறதால, அந்த சீசன்ல மொத்தமா ஆர்டர் பிடிக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.’’
பயிற்சி?
‘‘ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 150 ரூபாய்.’’

-ஹேமா
Contact: 91-44-42209191 Extn:2234

 

பனை ஓலையில் பொருள் சேர்க்கலாம்

சுற்றுச்சூழலுக்குக் கேடு என்று தெரிந்தும், பிளாஸ்டிக் உபயோகத்தைக் கைவிடுவதாக இல்லை நாம். சாப்பிடுகிற சிப்ஸில் இருந்து, அணிகிற செருப்பு வரை சகலத்திலும் பிளாஸ்டிக் கலப்பு!

நாகை மாவட்டம் வேட்டைக்கார நெருப்பைச் சேர்ந்த பெரியநாயகி தயாரிக்கிற பொருள்கள் ஒவ்வொன்றும், பிளாஸ்டிக்குக்கு சரியான மாற்று! தொப்பி, தட்டு, கூடை, பை, பூக்கள், பூந்தொட்டி... இப்படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கக்கூடிய அத்தனை அயிட்டங்களையும், இயற்கைக்கு உகந்த பனை ஓலையில் செய்கிறார் இவர்.

‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலை. கூலி வேலைக்குப் போயிட்டிருந்தேன். மகளிர் சுய உதவிக் குழுவில சேர்ந்தா, சுய தொழில் பண்றதுக்கு பேங்க் கடன் கிடைக்கும்னு சொன்னாங்க. சேர்ந்தேன். பனை ஓலைல பொருள்கள் தயாரிக்கக் கத்துக் கொடுத்தாங்க. கடனும் கிடைச்சது. அஞ்சு வருஷமா இந்தத் தொழில்தான் சோறு போடுது’’ என்கிறார் பெரியநாயகி.பனை ஓலையில் செய்கிற கைவினைப் பொருள்களுக்கு இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறவர், இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு, தொழிலாகத் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘பனை ஓலை... ஒரு குருத்து 5 ரூபாய்லேர்ந்து 7 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஓலை கிழிக்கிற மெஷின், சாயம், அதைக் கலக்கறதுக்குப் பெரிய பாத்திரம்... அவ்வளவுதான். 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்.’’

என்னென்ன பொருள்கள்?
ஒரு நாளைக்கு எத்தனை?
‘‘விதம்விதமான கூடை, மாலை, தட்டு, தொப்பி, பை, முறம், பூங்கொத்து... இப்படி பத்துக்கும் மேலான அயிட்டங்கள் பண்ணலாம். ஒரு குருத்துல ஒரு அயிட்டம்தான் பண்ண முடியும். ஒரு நாளைக்கு 4 பீஸ் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கோயில் திருவிழாக்கள்ல அதிகம் விற்பனையாகும். டூரிஸ்ட் அதிகம் வர்ற ஏரியாக்கள்ல உள்ள கடைகளுக்கு சப்ளை பண்ணலாம். கண்காட்சிகள்ல வைக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?
‘‘அவங்கவங்க வேகத்தையும் திறமையையும் பொறுத்து 15 முதல் 30 நாள் பயிற்சி... ஒருநாளைக்கு 100 ரூபாய் கட்டணம்.’’

பிரெட்கிராப்டிங் தயாரிப்பது எப்படி

பெண்கள் வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க எத்தனையோ கவுரவமான வழிகள் உள்ளன. அவசரஅவசரமாய் தூங்கியெழுந்ததும் ஒன்றும் பாதியுமாய் சமையலை முடித்து அரக்கப்பரக்க குழந்தைகளை பள்ளிக்குத் துரத்தி விட்டு ஓட்டமும் நடையுமாய் சென்று காலைப் பேருந்தை பிடித்து அலுவலகம் போனால் உயரதிகாரியிடம் திட்டு வாங்கி... இவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு சாரசரி பெண்ணால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்? அதிகபட்சம் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கிடைக்குமா?

* அதே அளவு வருவாயை நாம் வீட்டிலிருந்தபடியே நமக்கு விருப்பமான நேரத்தில் பிடித்தமான வேலையைச் செய்யவும் முடியும். அட அது எப்படி என்கிறீர்களா? சாப்பிட பயன்படுத்துகிறோமே ரொட்டி. அதைக் கொண்டு விதவிதமான வடிவங்களில் கலைப் பொருட்களைச் செய்வதுதான் "ப்ரெட்கிராப்டிங்" என்கிறார்கள். ஆனால் இதை பார்த்து ரசிக்கத்தான் முடியும்.

* சாப்பிட முடியாது காரணம் இதில் துத்தநாக ஆக்ஸைடு கலந்திருப்பதுதான். எறும்பு பூச்சிகளின் அரிப்பிலிருந்து இப்பொருட்களைக் காப்பதற்காகவே துத்தநாக ஆக்ஸைடு கலக்கிறார்கள்.

* வீட்டிலுள்ள அன்றாடப் பணிகளை முடித்துவிட்டு தன் கையால் செய்த பொருட்களால் வீட்டை அலங்கரிப்பதோடு மட்டுமல்லாமல், ப்ரெட்கிராப்ட் வெஜிடபுள் கார்விங் போன்ற விஷயங்களில் பெண்கள் ஈடுபடுவது அவர்களின் ரசனையை உயர்த்துவதுடன் குடும்ப வருவாயைப் பெருக்கும்.

* பிரெட் 5 துண்டுகள், துத்தநாக ஆக்ஸைடு ஒரு டீஸ்பூன், பெவிகால்- தேவையான அளவு, வளையும் தன்மையுள்ள மென்மையான கம்பி, பேப்ரிக் பெயிண்ட்- ஏதேனும் 4 நிறங்கள், ஐஸ்கிரீம் கிண்ணம்-1 , தேங்காய் எண்ணெய் சிறிதளவு.

செய்முறை:

* பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு மிக்ஸியில் பொடியாக்கிக் கொள்ளவும். பிரெட்தூள், மற்றும் துத்தநாக ஆக்ஸைடை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு பெவிக்கால் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* மாவு பிசையும் போது கையில் பிசுபிசுப்பாக ஒட்டிக்கொள்ளாமல் இருக்க உள்ளங்கையில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும். கிண்ணத்தைச் சுற்றி பெவிகால் தடவவும். பெவிக்காலின் மேல் பேப்பரை ஒட்டவும். பிசைந்து வைத்துள்ள மாவை பேப்பரில் ஒட்டவும். வளைவாக இருப்பது போல் கம்பியைச் சொருகவும்.

* (இது கூடை போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்) ஒவ்வொன்றும் காய்ந்த பிறகுதான் அடுத்தக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். காய்வதற்கு எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும்.

* முதலில் டெடியின் உடம்பைச் செய்துவிட்டு கை, கால் தலை செய்வதற்காக உடம்பின் மேல் பக்கவாட்டில் கைகளுக்காக இரு பக்கங்களிலும் இரண்டு சிறிய கம்பியும், கீழ் பக்கவாட்டில் கால்களுக்காக இரண்டு சிறிய கம்பியும், உடம்பின் மேல் பாகத்தில் தலைக்காக இரண்டு கம்பியும், சொருகி வைக்கவும்.

* உடம்பு பகுதி காய்ந்த பிறகு கை, கால், தலை என்று சரி செய்து அதற்காகவிடப்பட்டுள்ள கம்பியில் அழகாக சொருகி விடுங்கள். தலை செய்யும் போதே காதுக்காக இரண்டு கம்பி செய்த பிறகு காதையும் செய்து கம்பியில் பொருத்தவும்.

* முழுமையாக எல்லாம் காய்ந்த பிறகு பேப்ரிக் பெயிண்ட் கொண்டு வண்ணம் தீட்டுங்கள். கூடையைச் சுற்றி, பூ, இலை என்று நாம் செய்யும் அலங்காரங்கள் எல்லாம் கற்பனையைப் பொருத்தது.

* உதாரணமாக பூ என்று வைத்துக் கொள்ளுங்கள். அதைச் செய்வதற்கு பெரிதாக ஒன்றும் மெனக்கிட வேண்டாம். சுண்டைக்காய் அளவு மாவை உருட்டிக் கொண்டு பேனாவின் பின் பக்கத்தினால் மாவை அழுத்தினால் பூ, ரெடி. இதை கூடையிலுள்ள கம்பியில் ஆங்காங்கே சொருகி வைத்தால் அழகான பூக்கூடை ரெடி.

கைவேலை செய்வதற்கு நிறைய பொறுமையும் ஆர்வமும் தேவை. இந்த மாதிரி ஒரு கலைப் பொருளைச் செய்ய 50லி ருந்து 75 ரூபாய் வரைதான் ஆகும். ஆனால் கடைகளில் 150 லிருந்து 200 ரூபாய் வரை கொடுத்து வாங்கத்தயாராக இருக்கிறார்கள். தெரிந்தவர்களுக்குப் பரிசாகவும் அளிக்கலாம்.

சோப்பு தயாரிப்பது எப்படி

சோப் பவுடர், சோப் ஆயில்  போன்ற வை இருந்தாலும் பலர் துவைப்பதற்கு சோப்பு கட்டிகளையே பயன்படுத்து கின்றனர். அதிக கிராக்கி இருக்கும் சலவை சோப்புகளை தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம் .நகர பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர்.

வாஷிங்மெஷினில் துவைத் தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழு வதுமாக  போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். கிராமங்களை பொறுத்தவரை மக்கள்  துவைப்பதற்கு சோப் களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் சோப்கள் கிடைக்கின்றன. இதில் குறிப்பிட்ட பிராண்ட் கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில்  பிரபலமாக இருக்கும். நன்றாக விற்கும்.

தயாரிப்பது எப்படி?

சோப் தயாரிக்கும் இயந்திரம் கலவை, பிளாடர், கட்டிங் ஆகிய 3 பகுதிகளை கொண்டது. கலவை இயந்திரம் ஓட துவங்கியதும் அதில் வாஷிங் சோடா 12 கிலோ, சிலரி ஆயில் 20 கிலோ, டினோபால் பவுடர் 50 கிராம், தண்ணீர் 2 கிலோ ஆகியவற்றை கொட்ட வேண்டும், 10 நிமிடத்துக்கு பின், களிமண் பவுடர் 5 கிலோ, கால்சைட் (கல்மாவு) 48 கிலோ, சிலிகேட் 5 கிலோ ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக 7 நிமிட இடைவெளிகளில் கொட்ட வேண்டும்.

அதில் எஸ்டிபிபி 5 கிலோ, சென்ட் 200 மி.லி, நீல நிற பவுடர் 50 கிராம் ஆகியவற்றை கொட்டி 29 நிமிடம் கழித்து இயந்திரத்தின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். இப்போது கலவை இயந்திரத்தில் நீல நிறத்தில் பேஸ்ட் உருவாகியிருக்கும். அதை பிளாடரில் செலுத்தினால், அச்சு வழியாக நீளமான சோப் பார் வரும். அது தேவையான அளவு கட் செய்யப்பட்டு வெளியேறும். இவற்றை டிரேயில் அடுக்கி, லேபிள் மூலம் கவர் செய்தால் சோப் விற்பனைக்கு தயார். மணிக்கு 100 கிலோ வீதம் உற்பத்தி செய்யலாம்.


சந்தை வாய்ப்பு

குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து சோப்களை விற்கலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம்.கடைகளில் வினியோகித்த சோப்களுக்கு, அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது.

புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தை பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். உற்பத்தி அதிகரித்தால் சலவை சோப்களை கைகளால் பேக்கிங் செய்வதற்கு பதிலாக பேக்கிங் மெஷினை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறைந்த நேரத்தில், அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். பேக்கிங் மெஷினுக்கு மட்டும் கூடுதல் முதலீடு தேவை.

சலவை சோப் உற்பத்தியோடு சலவை பவுடரையும் தயாரிக்கலாம். சோப் உற்பத்தி செய்வதை விட சலவை பவுடர் உற்பத்தி எளிதானது. சலவை பவுடரை சாஷே ஆட்டோமேடிக் பேக்கிங் இயந்திரம் மூலம் பேக்கிங் செய்து விற்கலாம். இதில் சாஷே பேக்கிங் இயந்திரத்துக்கு கூடுதல் முதலீடு தேவை. தற்போது பாத்திரம் துலக்கும் சோப் மக்களிடையே பிரபலமாகி வருகிறது.

சலவை சோப் தயாரிக்கும் இயந்திரத்தில் பாத்திரம் துலக்கும் சோப்பும் தயாரிக்கலாம். அதற்குரிய கெமிக்கல்கள் மட்டும் மாறுபடும். தயாரிப்பு முறை சலவை சோப் தயாரிப்பது போன்றதுதான். பாத்திரம் துலக்கும் சோப்புடன் பாத்திரம் துலக்கும் பவுடரும் தயாரிக்கலாம். 


Sunday, February 26, 2012

'கேப்' விழுந்திருச்சா?..உடனே காரணத்தை கண்டுபிடிங்க!

திருமணமான புதிதில் தம்பதியர் இடையே காற்று கூட புக முடியாத அளவு நெருக்கம் ஏற்படுவது இயல்பு. தம்பதியர் இடையேயான காதல் உணர்வுகள் ஒரு கட்டத்திற்குப் பின் காணமல் போய்விடுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

மன அழுத்தம்

தம்பதியரை முதலில் தாக்குவது மன அழுத்தம். அது பணிச்சூழல் பற்றியதாகவும் இருக்கலாம், பணம் தொடர்புடையதாகவும் இருக்கலாம். இந்த மன அழுத்தமே தம்பதியரிடையேயான நெருக்கத்தை பிரிக்கும் முக்கிய எதிரியாக உள்ளது. எனவே மன அழுத்தத்தின் அளவை தெரிந்து கொண்டு அது குடும்பத்தை பாதிக்காத அளவு மருத்துவர்களிடமோ, உளவியலாளர்களிடமோ ஆலோசனை பெற வேண்டும். மன உளைச்சல் காரணமாகவும் தம்பதியரிடையே இடைவெளி ஏற்பட காரணமாகிறது.

குடும்ப பிரச்சினை

உறவுகளிடையே ஏற்படும் சிக்கல்கள் தம்பதியரிடையேயான உறவுக்கு வேட்டு வைக்கும். தகவல் பரிமாற்றத்தில் புரிந்து கொள்ள இயலாத நிலை, தேவையற்ற விவாதங்களும் குடும்ப உறவுகளை பாதிக்கும்.

போதை ஆபத்து

மது குடித்துவிட்டு போதையில் மிதப்பது, கண்ட போதை வஸ்துக்களை உபயோகித்துவிட்டு உறங்கிப் போவது தம்பதியரிடையே நெருக்கத்தை குறைக்கிறது.

உறக்கக் குறைபாடு

பணிச் சூழல், அதிகாலையில் எழுந்து அலுவலகம் சென்றுவிட்டு இரவு வீடு திரும்புவது, உடலில் சோர்வை அதிகப்படுத்திவிடுகிறது. நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி எழுவது அசதியை ஏற்படுத்துவதால் தம்பதியரிடையே இடைவெளி ஏற்படுகிறது. எனவே சரியான அளவில் பணி நேரத்தையும், ரொமான்ஸ்க்கான நேரத்தையும் திட்டமிடவேண்டும் என்கின்றனர் உளவியலாளர்கள்.

குழந்தை பிறந்திருக்கா?

சிறு குழந்தைகள் பிறந்த சமயமாக இருந்தால் அது தம்பதியரிடையே இடைவெளி ஏற்படும் காலமாகும். எனவே குழந்தைக்கு அதிக நேரம் ஒதுக்குவதோடு, ரொமான்ஸ்சுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

ரொம்ப குண்டாயிட்டோமோ?

திருமணத்தில் பார்த்ததை விட இப்ப ரொம்ப குண்டாயிட்டோமோ என்ற எண்ணம் உளரீதியான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதுவும் கூட இடைவெளிக்கு காரணமாகிறது. உடல் பருமன் காரணமாக ஆண்களுக்கு டெஸ்டோஸ்ட்டிரான் சுரப்பு குறைவதும் தம்பதியரின் இடைவெளிக்கு காரணமாகிறது.

மெனோபாஸ்

பெண்களுக்கு மெனோபாஸ் காலம் வந்தாலே வசந்த காலமே முடிந்துவிட்டதைப் போல உணர்வர். வலி, வறட்சி போன்றவைகளினால் உறவில் ஆர்வமின்மை ஏற்படுகிறது. இதுவும் தம்பதியரிடையே வில்லனாக புகுந்து இடைவெளியை ஏற்படுத்துகிறது.

எனவே தம்பதியர் இருவரும் கலந்து ஆலோசித்து பிரச்சினையின் உண்மை தன்மையை புரிந்து கொண்டு இடைவெளியை குறைக்க முயல வேண்டும். அப்பொழுதுதான் வாழ்க்கை என்னும் பூந்தோட்டத்தில் மகிழ்ச்சிப் பூக்கள் பூக்கும்.

இல்லற வாழ்க்கையை உற்சாகப்படுத்தும் யோகாசனங்கள்!

யோகாசனம் மூலம் உடலும் மனமும் ஆரோக்கியமாகும் என்பதோடு தாம்பத்ய உறவுக்கு உற்சாகமூட்டுவதாக உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர். யோகாசனப் பயிற்சியின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு தாம்பத்ய வாழ்க்கையில் சிறந்த முறையில் செயல்பட செய்வதும் தெரியவந்துள்ளது.

பத்மாசனம், தனுராசனம், புஜங்காசனம், சர்வாங்கசனம் ஆகிய ஆசனங்களை தவறாது செய்வதன் மூலம் உடலும், மனமும் உற்சாக மடைவதோடு தாம்பத்தியத்திலும் உற்சாகமுடன் ஈடுபடலாம். இது செலவில்லாத ஆரோக்கியமான மருத்துவம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பத்மாசனம்

பத்மாசனத்தில் உடல் ஒரு கட்டுக்குள் வந்து நிற்பதால் உடல் அசைவு அற்று ஒரே நிலையில் இருக்கும் போது சுவாசத்தினுடைய ஓட்டம் சமன்படுகிறது. சுவாசத்தினுடைய ஒட்டம் சமன்படுவதால் எண்ணங்களின் சிந்தனைகளின் ஓட்டமும் சமன்படுகிறது. இதனால் மனம் சலனமற்று அமைதி அடைகிறது. தியானப் பயிற்சிக்குரிய ஆசனம் பத்மாசனமாகும்.

புஜங்காசனம்

புஜங்காசனம் செய்தவன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்குகிறது. இப்பயிற்சியை செய்து வந்தால் வெள்ளைப்படுதல், மாதவிடாய் தள்ளி போதல் போன்ற நோய்கள் மறையும்.அதற்கு இந்த ஆசனம் செய்து முடித்ததும் உடன் சலபாசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்களை சேர்த்து செய்து வர வேண்டும்.

இதனால் முதுகுத்தண்டு தொடர் நழுவுதல், முதுகு தசை வலி மற்றும் அடிமுதுகு வலி ஆகியவற்றைப் போக்கி முதுகுத்தண்டை ஆரோக்கியமாக வைக்கிறது. சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயிற்று பொறுமல், மலச்சிக்கல், இருதய பலவீனம் ஆகியவற்றை போக்குகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது.

தனுராசனம்

வில்போல வளைந்து செய்வதால் தனுராசனம் எனப்படுகிறது. இதை செய்வதன் மூலம் இது பெண்களுக்கு நல்ல பலன் தரும் ஆசனம். மாதவிடாய், கர்ப்பக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். பெண்களுடைய ஓவரி ஆண்களுடைய டெஸ்டீஸ் மற்றும் சிறுநீரகங்களைச் சுறுசுறுப்படையச் செய்து அதனால் பலம் பெற்று இளமை உண்டாகும். வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகி வயிற்று ஊளைச் சதையை குறையும்.

உற்சாகம் கூடும்

யோகா பயிற்சியின் உடலானது கட்டுக்கோப்பாக மாறுகிறது எந்த அளவுக்கு, எத்தனை நிமிடத்திற்கு யோகாசனம் செய்கிறீர்களோ… அதைப் பொறுத்து உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் பருமன் குறையும். அதே நேரத்தில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு, யோகாவில் இருக்காது என்பது உறுதி. இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதோடு இல்லற வாழ்க்கையிலும் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

சாம்பிராணி எப்படி உருவாகிறது தெரியுமா


பண்டைய காலம் முதல் மதவழிபாட்டிற்கும் மருத்துவ பயன்பாட்டிற்கும் சாம்பிராணி பயன்பட்டு வருகிறது . சாம்பிராணி எதில் இருந்து பெறப்படுகிறது  என்று என்றாவது  நீங்கள் யோசித்தது  உண்டா ?

மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார் பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய  ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தார்.

சாம்பிராணி ஆனது பாஸ்வெல்லியா செர்ராட்ட(Boswellia serrata)எனப்படும் தாவரகுடும்பத்தை சேர்ந்த  ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) எனப்படும் மரத்திலிருந்து வடியும் பால் ஆகும் இது மிக மெதுவாக கடினமாகி ஒளிபுகும் தன்மையும் எளிதில் எரியும் தன்மையுடைய சாம்பிராணி ஆக மாறுகிறது. இவையை எரித்தால் மிகுந்த மணத்தை பரப்பும்
ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரங்கள் மேற்கத்திய நாடுகள் மற்றும் இந்தியாவில் குஜராத்,அஸ்ஸாம்,ராஜஸ்தான்,பீகார், ஒரிஸா, மற்றும் தமிழ்நாட்டில் அதிமாக காணப்படுகிறது .தமிழ்நாட்டில் குறிப்பாக கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் 500 மீ – 700 மீ உயரத்தில் காணப்படுகிறது மரமானது உறுதியானது ஆனால் எளிதில் அறுக்கவும் , இழைக்கவும் முடியும் இவ்வகை மரங்கள் தீக்குச்சிகள் தயாரிக்க பெரிதும் பயன்படுகின்றன . நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் பால் அதிகமாக வடியும் ஒரு மரத்திலிருந்து ஆண்டு ஒன்றிற்க்கு 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்

சாம்பிராணி மருத்துவ பயன்கள்

ஃபிரங்கின்சென்ஸ்(Frankincense) மரத்திலிருந்து கோந்தும் பெறப்படுகிறது இவையும் சாம்பிராணி போலத்தான் கோந்தை நீருடன் சேர்த்து பெண்டோஸ் சர்கரைகள் தயாரிக்கப்படுகிறது இது இருமல், காமாலை, நாள்பட்டபுண்கள், சொறி, சிரங்கு ,படர்தாமரை போன்றவற்றிற்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

சாம்பிராணியை ஆவியாக்கி போஸ்வெல்யா எண்ணை , டர்பெண்டைன் எண்ணை போல எண்ணை எடுக்கிறார்கள்  இதிலிருந்து வார்னிஷ் தயாரிக்கப்படுகிறது . சாம்பிராணி எண்ணை ஆனது சோப்பு தயாரித்தலிலும் பயன்படுகிறது
 

ஜெராக்ஸ் உருவான எப்படி

உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகிவிட்டது ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்திரத்தை கண்டுபிடிக்க  செஸ்டர் கார்ல்சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட காலத்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமானங்களும் துயரங்களும் சொல்லில் அடங்காதவை வருங்கள் நண்பர்களே  நகலெடுக்கும் இயந்திரத்தின் வரலாற்றை புரட்டிப்பார்போம்.

1960 மார்ச் மாதம்ஜெராக்ஸ் 914 “ எனும் நகலெடுக்கும் கருவி நடைமுறைக்கு வருவதற்க்கு முன் நகலெடுப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக இருந்தது அதாவது புகைப்படக்கலையின் நுட்பங்களை பயன்படுத்தி பயிற்ச்சி பெற்ற பணியாளர்கள் பலவிதமான இரசயனங்களில் நனைத்து மணிக்கணக்கில் காயவைத்து  ஒன்றுடன் ஒன்று ஒட்டி கவனமாக நகலெடுத்தனர் கொஞ்சம் கவனம் சிதறினால் நகலெடுக்க வேண்டிய முக்கிய தாள்கள் பாதிப்புக்கு உள்ளாகி விடும் .

ஜீ பூம்பா சிந்தனை

1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலாத்தில் ஒரு வறுமைகுடும்பத்தில் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் தனது குடும்பத்தின் வறுமையை போக்க பல இடங்களில் பணியாற்றினார்பேடண்ட்துறையில் பணியாற்றிய போது கார்ல்சனுக்கு தனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்களை பார்த்து நகலெடுக்க வேண்டிய தாளை ஒரு கருவி மேலே வைத்தால்  ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார்  தனது யோசனையை அலுவலக நண்பர்களிடம் சென்னார் ஒட்டுமொத்த அலுவலகமோ கை கொட்டி சிரித்தது தனது யோசனையை நடைமுறைபடுத்தப்போகிறேன் என்று சொன்னதிற்கு  பெரிய பெரிய விஞ்ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .

முயற்சியே மூலதனம்

கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபாரநம்பிக்கை கொண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம்  ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவருடைய கவணத்தை ஈர்த்தது இருட்டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக்கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது  ஒளிக்கதிர்கள் படும் போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது  ஒளிமின் நிகழ்வு அது போல முடி, பட்டுத்துணி, எண்ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத்தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும்  இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக்கு வடிவம் கொடுத்தார் செஸ்டர் கார்ல்சன் . கருவியின் மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளிஉணர் பொருளினால் பூச்சு ஏற்படுத்தி அதில் நிலை மின்சாரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண்டிய ஒளி ஊடுருவும் தாளை வைத்து அதன் வழியே ஒளியை பாய்ச்சினார் தாளின் எழுத்துகள் இல்லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தகட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற்றார் அக்கருவிக்கு உரிமமும் பெற்றார்

இரண்டாம் உலகப்போரினால் கார்ல்சன் பட்ட கஷ்டம்

தனது கருவியை 1938 இல் சந்தைக்கு அறிமுகம் செய்தார் . பார்பதற்கு காம , சோமா வென்ற கருவி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தால் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்களால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங்களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நிறுவனங்களும் கார்ல்சனை கிண்டலடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டது தான் பட்ட பாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது

தோல்வி மேல் தோல்வி

எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத்தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன்  பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பணமின்மையால் நகலெடுக்கும் கருவியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது  மீண்டும் செஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி  இருப்பினும் லித்தோகிராபிக் அச்சுத்துறைக்கும் இராணுவதில் பெரிய வரைபடங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது

சாதித்த ஜெராக்ஸ் 914 

பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960ஆம் ஆண்டு மார்ச் மாதம்ஜெராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையாளர்களுக்கு  நேரிடையாகவே வாடகைக்கு விட்டது கருவியின் விரைவான நகலெடுக்கும் தன்மையும், நகல் எழுத்துகளின் துல்லியமும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்பரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு  உரிமைத்தொகையாக மட்டும்  இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ்ஞானியாக பதிவு செய்யப்பட்டான் 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites