இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, January 29, 2013

கருப்பை பாதித்தால் ஆப்ரேசன் அவசியமா?


1. சிறுவயதிலேயே பருவமடைவது ஏன்?


அதிகப்படியான கொழுப்புச் சத்து மற்றும் வேதியல் பொருட்கள் நிறைந்த உணவுகளாலும், முறை தவறிய உணவுப் பழக்கங்களாலும் சீக்கிரமே உடல் பருமன் அடைந்துவிடுவார்கள். அதனால் சிறுவயதிலேயே பூப்படைந்து விடுகிறார்கள். பரம்பரை காரணமாகவும், உடல் & மன ரீதியாக எதாவது பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் சிறுவயதிலேயே பூப்படைந்துவிடுவார்கள். அதுமட்டுமில்லை; இயல்பாகவே பருவம் அடையும் வயது இப்போது குறைந்துவிட்டது. அதனால், இதுபற்றி கவலைப்படவேண்டிய தேவையில்லை. ஆனால், மனதளவில் குழந்தைக்கு பயம் ஏற்படாத அளவுக்கு மாதவிடாய் பற்றி தாய் எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளியில் ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு இதுபற்றிய கல்வியை புகட்டவேண்டும்.

2. எந்தெந்த உணவுகளில் கொழுப்புச்சத்து அதிகம் இருக்கிறது?

பிஸா, பர்க்கர், வறுத்த மற்றும் பொறித்த உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவுகளில் கொழுப்புச் சத்து அதிகம் இருக்கிறது. அதேபோல பிஸ்கட், சில வகை சாக்லேட்களில் கொழுப்பு அதிகமாக இருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள தட்பவெப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அவர்கள் பிஸா, பர்க்கர் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், நம்முடைய சீதோஷன நிலையே வேறு. இங்கு இவ்வளவு அதிகப்படியான கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள் நமக்கு தேவையே இல்லை. நார்மலாக நம்முடைய உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, நாம் அன்றாடம் உட்கொள்கிற உணவுமுறையிலேயே போதுமான அளவுக்கு இருக்கிறது. அதனால், தேவைக்கு அதிகமாக கொழுப்புச் சத்து உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

3. பருவம் வந்த பெண்கள் எந்தமாதிரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்..?
பருவம் வந்த பெண்களுக்கு ஓரளவு கொழுப்புச் சத்து, அதிகமான புரதச் சத்து தேவைப்படுகிறது. கருப்பை வளர்ச்சிக்கு கொழுப்பும் புரதமும் மிகவும் அவசியம். அதனால்தான் நம்முடைய முன்னோர் பெண் குழந்தைகள் பூப்படைந்ததும் கொழுப்பு, புரதம் உள்ள உளுந்து கஞ்சி, உளுந்து களி செய்து கொடுத்தார்கள். முட்டை கொடுத்து பிறகு நல்லெண்ணெய் உட்கொள்ள வைத்தார்கள். அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே நம் முன்னோர் உணவு பழக்க வழக்கங்களில் எவ்வளவு ஆராய்ந்து ஈடுபட்டு இருக்கிறார்கள்.

4. பூப்படைந்ததும் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிடுமா?
சிலருக்கு பூப்படைந்ததும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் சுழற்சி ஏற்படும். சிலருக்கு ஆறுமாதம்கூட ஆகலாம். ஆனால், ஒரு வருடத்துக்குள் இந்த சுழற்சி சரியாக வந்தாக வேண்டும். சில நேரங்களில் ரத்த சோகை இருந்தால்கூட உதிரப்போக்கு ஏற்படாமல் இருக்கும். அதனால், மூன்று மாதங்களுக்குள் சுழற்சி ஏற்படவில்லை என்றால், என்ன காரணத்தால் ஏற்படவில்லை என்பதை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தெரிந்துகொள்வது நல்லது. காரணம், சில நேரங்களில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டிய தேவையும் ஏற்படும். மாதவிடாய் ஏற்படுவதற்கு சரியான ஹார்மோன் சுழற்சி தேவைப்படுகிறது. இது சரியான விகிதாசாரத்தில் ஏற்படாமல் போனாலும், ஊட்டச்சத்து குறைவு ஏற்பட்டாலும் சரியான சுழற்சி ஏற்படாது.
5. மாதவிடாயின்போது உதிரம் எங்கிருந்து வெளியேறுகிறது?

கருப்பையில் ஒரு சவ்வு இருக்கிறது. அது ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் இருந்து 14&ம் நாள் வரைக்கும் வளரும். அதன்பிறகு கரைய ஆரம்பித்து 28&ம் நாள் வரைக்கும் கரையும். அதன்பிறகு அது உதிரமாக வெளியேறும். கர்ப்ப காலத்தில் கருவைப் பாதுகாப்பதற்கு இந்த சவ்வு பயன்படுகிறது. அதனால்தான் கர்ப்பமாக இருக்கும்போது மாதவிடாய் ஏற்படுவது இல்லை.

6. அதிக உதிரப் போக்கு ஏன் ஏற்படுகிறது?

பல வகைகளில் உதிரப் போக்கு அதிகமாகலாம். 1. (இள வயது மற்றும் முதிய பெண்களாக இருந்தால்) தாறுமாறான ஹார்மோன் உற்பத்தி 2. (நடுத்தர வயது பெண்களாக இருந்தால்) கருப்பை அல்லது கருவகத்தில் உள்ள கட்டிகள் 3. தைராய்டு அதிகமாக சுரப்பதால் 4. சர்க்கரை நோய் இருந்தால் 5. கருப்பையில் தைப்ராய்டு கட்டிகள் இருந்து, அது பெரிதாக வளர்ந்தால் 6. கருவகத்தில் ஏற்படும் கட்டிகளால் 7. ஹார்மோன் குறைபாடு. 8. ரத்த சோகை 9. திருமணமான பெண்களுக்கு கரு கலைந்து இருந்தால் அதிக உதிரப் போக்கு ஏற்படலாம். இதில் எதனால் அதிகமாக உதிரம் போகிறது என்பதை மருத்துவ பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த முடியும்.

7. குறைவான உதிரப்போக்கு ஏற்படுவதற்கு என்ன காரணம்?

இதற்கும் சில காரணங்கள் இருக்கின்றன. 1. தைராய்டு குறைவாக சுரப்பது 2. ரத்தம் இல்லாமல் போவது 3. சிறுநீரக நோய்கள் 4. போதிய அளவு உணவு உட்கொள்ளாமல் போதல் 5. கருவகம், கருப்பை சரியான வளர்ச்சி அடையாமல் இருந்தாலும் உதிரம் குறைவாகப் போகும். இதில் எந்தக் காரணத்தால் உதிரப் போக்கு குறைவாக இருக்கிறது என்பதை மருத்துவ பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.

8. சுத்தமாக உதிரப்போக்கே இல்லாமல் போவது பற்றி சொல்லுங்கள்...
சுத்தமாக உதிரப்போக்கே இல்லாமல் இருப்பதற்கான காரணங்கள்: 1. பருவம் அடைந்தபிறகு சுத்தமாக உதிரமே வராமல் இருந்தால் கருவகம், கருப்பை வளர்ச்சி அடையாமல் இருக்கலாம் 2. ஹார்மோன் குறைபாடு 3. குரோமோசோம் குறைபாடு இருந்தாலும் சுத்தமாக உதிரப்போக்கு ஏற்படாமல் போகலாம்.

9. கருப்பை மற்றும் கருவகத்தில் உள்ள கட்டிகளை எப்படி அகற்றுவது?

முன்பெல்லாம் அறுவைசிகிச்சை மூலமாக நீக்குகிற முறை மட்டுமே இருந்தது. இப்போது அதைவிட சுலபமாக லேப்ரோஸ்கோப்பி முறையில் துளை இட்டு அதன் வழியாக கட்டியை அகற்ற முடியும்.

10. மெனோபாஸ் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்ய முடியுமா?

உணவுமுறை மூலமாக ஓரளவுக்கு ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்ய முடியும். புரோட்டீன் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் சோயா, கீரை வகைகள், காய்கறிகள், பழங்களை உட்கொள்ளவதாலும், மாவுச் சத்து நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்வதாலும் ஹார்மோன் குறைபாட்டை கட்டுப்படுத்தலாம். தேவையென்றால் மாத்திரை உட்கொள்ளவேண்டி வரலாம். ஹார்மோன் குறைபாடு இருந்தாலும் அதன் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள யோகா, உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் பதட்டமில்லாத அமைதியான மனநிலையில் இருப்பது நல்லது. இதையெல்லாம் கடைப்பிடித்தால் ஹார்மோன்களால் வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.

11. அடி இறங்குதல் என்றால் என்ன?

கருப்பை தனது இடத்திலிருந்து கீழே இறங்கி நமது தொடுதலுக்கும் பார்வைக்கும் தென்படுவதுதான் அடி இறங்குதல். கருப்பையைத் தாங்கக் கூடிய தசைகள் வலுவிழங்கும்போது அடி இறங்கிப்போகும். அதனால், தசைகளை இறுக்கமாகவும், எலும்புகளை வலுவாகவும் வைத்துக்கொள்வதன் மூலம் இதைத் தவிர்க்க முடியும். அதற்கு கால்சியம், புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதோடு யோகா, உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் இந்த பாதிப்பிலிருந்து தப்ப முடியும்.

12. மாதவிடாய் நின்றுபோன பிறகு குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?

செயற்கை முறை கருத்தரிப்புகள் இப்போது சாத்தியப்படுகின்றன.

13. மாதவிடாய் நின்றுபோனபிறகு உதிரப்போக்கு ஏற்படுமா..?

அப்படி ஏற்படக்கூடாது. ஏற்பட்டுவிட்டால் அபாயகரமானது. அது கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

14. கருப்பை புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

இதுதான் காரணம் என்று சொல்லமுடியாது. பரம்பரையாகவும் வரலாம். தவறான உணவுப் பழக்கத்தாலும் வரலாம். எந்தக் காரணத்துக்காவது ஹார்மோன் மாத்திரை அதிக அளவில் சாப்பிட்டு இருந்தாலும் வரலாம். அதனால், எந்த காரணத்தால் கருப்பை புற்று வருகிறது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இருந்து, அதை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் சிகிச்சை மூலமாக குணப்படுத்த முடியும். அதேநேரத்தில், கருப்பையில் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு முதலில் கருப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இருக்கவேண்டும். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்வதன் மூலமும், விழிப்புணர்வுடன் இருந்து ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலமும் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம். மெனோபாஸுக்குப் பிறகு உதிரப்போக்கு ஏற்படும் போதும், தாறுமாறான உதிரப்போக்கு ஏற்படும்போதும் மருத்துவ ஆலோசனை செய்துகொள்வது நல்லது.

15.  கருப்பை பாதிக்கப்பட்டால் அகற்றித்தான் தீரவேண்டுமா?

பெரிய கட்டிகள், புற்றுநோயாக மாறக்கூடிய கட்டிகள் இருந்தால், உடல்நலத்தைப் பாதிக்கக் கூடிய மிக அதிக அளவிலான உதிரப்போக்கு ஏற்பட்டால் எடுத்துதான் தீரவேண்டும். அதிகப்படியான உதிரப்போக்கை மருந்து மாத்திரைகளால் கட்டுப்படுத்தும் வாய்ப்பு இருந்தால் கருப்பையை அகற்றத் தேவையில்லை.

16. கருப்பை, கருவகம் அகற்றிய பிறகு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சிறுவயதாக இருந்தால் ஹார்மோன் தேவை ஏற்படலாம். எலும்பு தேய்மானம் ஏற்பட்டால் தடுக்கப்பட வேண்டும். இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

17. மாதவிடாய் நின்றுபோன பிறகு ஏற்படும் பாதிப்புகள் என்ன?

தோல் உலர்ந்து போகலாம். எலும்பு தேய்மானம் ஏற்படலாம். மன அழுத்தம் ஏற்படலாம். இதையெல்லாம் தடுத்துக்கொள்வது நல்லது.


18. மாதவிடாயின்போது எதனால் வலி ஏற்படுகிறது?

மாதவிடாயின்போது கருப்பை சுருங்கி விரிந்து ரத்தத்தை வெளியேற்றும்போது அதை மூளை உணர்ந்து வலி ஏற்படுத்துகிறது. உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்போதும் வலி ஏற்படலாம். கருப்பையில் கட்டி, நோய்த் தொற்று ஏற்பட்டாலும் வலி வரலாம். இளவயது பெண்களுக்கு எந்தக் காரணமும் இல்லாமல் வலி ஏற்படலாம். இதை மருத்துவத்துறை பீஹ்sனீமீஸீஷீக்ஷீக்ஷீலீமீணீ என்று அழைக்கிறது.


19. கருவகத்தில் ஏன் நீர்க்கட்டிகள் உண்டாகின்றன?

எந்தக் காரணமும் இல்லாமல் மாதச் சுழற்சியின்போது ஏற்படலாம். அதேபோல மாதச் சுழற்சியின்போது ஏற்படும் நீர்க்கட்டி சுழற்சியில் உடைந்து போகாமல் அப்படியே தங்கியும் போகலாம். ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும், நோய்த் தொற்று இருந்தாலும்கூட கருவகத்தில் நீர்க்கட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.


20. கருப்பையைச் சுற்றி எந்தெந்த வகையில் நோய்த் தொற்று ஏற்படுகிறது?

சிறுநீர் பாதையை சுத்தமாக வைத்துக்கொள்ளாத போதும், சுத்தமான உள்ளாடைகளை அணியாத போதும் நோய்த் தொற்று ஏற்படலாம். அதனால், எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குடும்ப உறவின் போது சுத்தமான வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படும்போது ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை செய்துகொள்வதால் பெரிய பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

1 comments:

Do you want to donate your kidnney for money? We offer $500,000.00 for one kidnney,Contact us now urgently for your kidnney donation,All donors are to reply via Email only: hospitalcarecenter@gmail.com or Email: kokilabendhirubhaihospital@gmail.com
WhatsApp +91 7795833215

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites