இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, April 16, 2012

எலுமிச்சை

தென்னை, பாக்கு, பழ மரங்கள் என்று எந்த சாகுபடியாக இருந்தாலும், தோட்டத்தை, களைகள் இல்லாமல் உழுது சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அதைத்தான் செயல்படுத்தியும் வருகிறார்கள். ஆனால், புலவர் நாகராஜ் ''களைகளை உயிர்மூடாக்காகப் பயன்படுத்தி, அவற்றையே உரமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இயற்கை வேளாண்மைக் கோட்பாடு. அதை வரி பிறழாமல் கடைபிடித்து வருவதாகவும், அது, தனக்கு வருமானத்தை வாரி வழங்குகிறது என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார். திருச்சி மாவட்டம், லால்குடி தாலூகாவில் உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்தான் புலவர் நாகராஜன். அங்கு களைகள் மண்டி, ஒரு சிறிய காடு போலக் காட்சி அளிக்கிறது, அவருடைய எலுமிச்சைத் தோட்டம். படர்ந்து விரிந்த அதிக எண்ணிக்கையிலானக் கிளைகள்,பசுமையான இலைகள், கொத்து கொத்தாகக் காய்த்துக் குலுங்கும் காய்கள், எனச் செழித்து நிற்கின்றன, எலுமிச்சை மரங்கள்.

சோதனையில் சாதனை
மிகுந்த உற்சாகத்தோடு பேசும் நாகராஜன், இவர் குடும்பத்துக்கு எட்டரை ஏக்கர் நிலம் இருக்கிறது. நல்ல வண்டல் பூமி. அதில், இரண்டரை ஏக்கரில் வாழையும், நான்கே முக்கால் ஏக்கரில் நெல்லும் இருக்கிறது. மீதி ஒன்றேகால் ஏக்கரில் எலுமிச்சை இருக்கிறது. இந்த இடத்தில் இருபது வருடத்துக்கு முன்பு வாழை சாகுபடி மட்டும்தான் நடந்ததாக கூறுகிறார். சோதனை முயற்சியாகத்தான் எலுமிச்சை நடவு செய்திருக்கிறார். நல்ல வருமானம் கிடைக்கவும், அப்படியே பராமரித்து வருவதாக கூறுகிறார்.

களைகளே உரம்
25 அடி இடைவெளி கொடுத்து, மொத்தம் 100 மரங்களை நடவு செய்திருக்கிறார். எல்லாமே நாட்டு ரகங்கள்தான். இரசாயன உரம் கொடுப்பதே இல்லை. புண்ணாக்கு, எருனு முழு இயற்கை விவசாயம்தான். அதே மாதிரி, மூங்கில் புல், விருமலைக்காச்சி பூண்டு, புண்ணாக்குப் பூண்டு, அருகம்புல் என்று எந்தக் களைச்செடியையும் தோட்டத்தில் இருந்து வெளியில் வீசுவதே இல்லை. ஆறு மாசத்திற்கு ஒரு தடவை அவைகளை பறித்துப் போட்டு போட்டு தண்ணிர் பாய்ச்சுகிறார். அது அப்படியே மட்கி உரமாகிவிடும். கன்று நடவு செய்த மூணு வருடம் வரைக்கும் மிளகாயை ஊடுபயிராக போட்டிருக்கிறார். தோட்டத்தை முழுக்க இயற்கையாவே பராமரிப்பதால் நோயோ, பூச்சியோ தாக்குவதேயில்லை. 20 வயதாகியும் இன்னும் காய்ப்பு குறையாமல் மகசூல் கொடுத்துட்டிருக்கிறது. காய்க்கிற பழங்கள், திரட்சியாக நல்ல நிறத்தோடு, சுவையோடு இருப்பதால், சந்தையில் தனி மவுசு இருக்கிறது. நல்ல விலையும் கிடைக்கிறது, என்று இயற்கை எலுமிச்சை விவசாயத்துக்குக் கட்டியம் கூறிய நாகராஜன், சாகுபடிப் பாடத்தை ஆரம்பித்தார்.  
25 அடி இடைவெளி
தேர்வு செய்த நிலத்தில் மூன்று சால் உழவு ஓட்ட வேண்டும். வரிசைக்கு வரிசை, செடிக்குச் செடி 25 அடி இடைவெளி இருப்பது போல ஒன்றரை கன அடி அளவுக்குக் குழி எடுக்க வேண்டும். ஒரு செடிக்கு ஒரு கிலோ ஆமணக்கு பிண்ணாக்கு, அரை கிலோ வேப்பம் பிண்ணாக்கு,15 கிலோ தொழுவுரம், 5 கிலோ ஆட்டு எரு என்கிற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இக்கலவையைக் குழிக்குள் கால் பாகம் அளவுக்கு நிரப்பி, நாட்டு எலுமிச்சைக் கன்றை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு, செடியைச் சுற்றி வட்டமாக லேசாக குழி பறித்து, மீதிக் கலவையைக் கொட்டிவிட வேண்டும். தொடர்ந்து வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும்.
ஆண்டுக்கொரு முறை உரம்
எலுமிச்சைச் செடிகள் நடவு செய்து மூன்று ஆண்டுகள் வரை, இடைவெளியில் காய்கறி போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம். கன்று நடவு செய்தபோது கொடுத்தது போலவே உரக் கலவையைத் தயாரித்து ஆண்டுக்கொரு முறை மரங்களுக்குக் கொடுத்து வர வேண்டும். இப்படி உரம் கொடுப்பதை, மரத்தைச் சுற்றி, அரை வட்ட அளவுக்குக் குழி எடுத்து கொடுக்க வேண்டும். அடுத்த ஆண்டில், எதிர் திசையில் அரைவட்டக் குழி எடுத்து உரமிட வேண்டும். மரத்தின் செழுமைத் தன்மை குறைந்தால் தொழுவுரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

மூன்றாம் ஆண்டில் காய்ப்பு
நடவு செய்த மூன்றரை ஆண்டுகள் கழித்து எலுமிச்சை காய்ப்புக்கு வரும். ஆண்டுக்கு ஆண்டு கொஞ்சம் கொஞ்சமாக மகசூல் அதிகரித்து, ஏழாம் ஆண்டிலிருந்து முழுமையான மகசூல் கிடைக்கத் தொடங்கும். மரங்களுக்கு இடையில் முளைக்கும் களைகளை ஆறு மாதத்துக்கு ஒரு முறை வெட்டி அப்படியே மரத்தைச் சுற்றிப் போட்டுவிட வேண்டும். பிறகு ஒரு வாரம் கழித்து தண்ணீர் பாய்ச்சினால், அவை நன்கு மட்கி மரங்களுக்கு உரமாகி விடும்.

மூன்று லட்சம் வருமானம்
நிறைவாக மகசூல் மற்றும் வருமானம் பற்றி பேசிய நாகராஜன், ஒரு மரத்தில் ஒரு வருடத்திற்கு சராசரியாக, 2 ஆயிரம் எலுமிச்சம்பழம் கிடைக்கிறது. மொத்தம் இருக்கிற 100 மரங்களில் இருந்து வருடத்துக்கு சராசரியாக 2 இலட்சம் பழம் கிடைக்கிறது.

சீசனைப் பொருத்து ஒரு பழம்
4 ரூபாய் வரைக்கும்கூட விலை போகும். சராசரியாக 1 ரூபாய் 50 காசு விலை கிடைக்கும். அந்தக் கணக்கில் ஒன்றேகால’ ஏக்கரில் இருந்து, வருடத்திற்கு 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இடுபொருள், களைபறிப்பு, அறுவடைக் கூலி என்று எல்லா செலவும் போக, இரண்டரை லட்ச ரூபாய் லாபமாகக் கிடைக்கிறது என்று மன நிறைவாகச் சொன்னார்.

நின்றுகொண்டே பழங்களை எடுக்கலாம்
மரத்தை சுற்றி விழுந்து கிடக்கும் பழங்களை சேகரிக்க, மூன்றரையடி நீளத்தில் அகப்பை போல இரும்பில் ஒரு கருவியைத் தயாரித்து வைத்திருக்கிறார் நாகராஜன். அதன் மூலம் கிழே விழுந்து கிடக்கும் பழங்களை நின்றுகொண்டே சேகரிக்கிறார்.
தொடர்புக்கு
044-42890002

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites