இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, April 18, 2012

"மண்புழு உரம் தயாரிக்க

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த கட்டக்குளத்தை சேர்ந்தவர் கார்த்திக்குமார். தோட்டக்கலையில் எம்.எஸ்சி., படித்த இவர், படிப்பு முடிந்ததும் டாடா கம்பெனிக்கு மாலத் தீவில் ஒரு தோட்டம் அமைத்துக் கொடுக்கும் பணியை ஏற்றார். ஓய்வு நேரத்தில் ஏற்றுமதி குறித்த பயிற்சியும் பெற்றார். அதன்பின் இந்தியா திரும்பிய இவர், இங்கிருந்து மாலத்
தீவிற்கு செடிகள் மற்றும் உரம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தார்.

ஒரு ஆண்டிற்கு முன் மதுரையில் மத்திய அரசின் நிதி உதவி பெற்று செயல்படும் "வேப்ஸ்' நிறுவனத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் தொழில் நுட்பம் குறித்து பயிற்சி பெற்றார். இப்பயிற்சி சான்றிதழை கொண்டு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் கடன் பெற்று மண்புழு உரப் பண்ணையை சொந்தமாக துவக்கினார். இங்கு தயாராகும் மண்புழு உரத்தை மாலத்தீவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் கார்த்திக்குமாருக்கு நல்ல வருமானம் கிடைத்து வருகிறது.

"மண்புழு உரம் தயாரிக்க அமைக்கப்படும் "பெட்' அகலம் ஒரு மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும். இடவசதிக்கு ஏற்ப நீளம் இருக்கலாம். அரை அடி ஆழத்திற்கு குழி வெட்டி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். அந்த குழியில் தென்னை நார் கழிவை கொட்டி, அதன் மீது "மொலாசஸ்' கழிவை துõவ வேண்டும். அடுத்ததாக, நன்கு காய்ந்த எரு பொடியை பரப்பி அதன் மீது ஈரமான சாணத்தை கொட்டி அதில் மண் புழுக்களை விடவேண்டும். சாணத்தை உணவாக எடுத்துக் கொண்ட மண்புழுக்கள் வெளியேற்றும் கழிவுகள் உரமாக கிடைக்கும்' என்கிறார் கார்த்திக்குமார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites