இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, November 1, 2011

அதுக்காக பயந்துட்டே இருந்தா எப்படி ..வாழ முடியாதுங்க... விழிப்புணர்வோடு இருப்போம்....

ஏங்க இப்படியெல்லாம் பண்றாங்க ? - எச்சரிக்கை அவசியம்...


( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை )
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....


ஒரு பெண் :
நான் பொறந்தது ஏழ்மையான குடும்பத்துல. எனக்கு படிக்கனும்னு ஆசை. ஃப்ளஸ் டூ முடிச்சதும் மேல படிக்கனும்னு சொன்னேன்.

ஆனா, 'காசில்லை, வீட்டுலயே இரு'ன்னு சொல்லிட்டாங்க
அந்த சமயத்துல பேப்பர்ல ஒரு விளம்பரம். 'படிப்பும் தரோம் வேலையும் தரோம்'னு. ஃபிளஸ்டூ படித்த கிராமத்துப் பெண்களுக்கு முன்னுரிமை'னு போட்டிருந்தாங்க.

நான் வீட்டுல சொல்லி, அவங்க கொடுத்திருந்த நம்பருக்கு போன் பண்ணினோம். ரொம்ப தன்மையா பேசினாங்க. 'பார்ட் டைமா வேலை பார்த்துக்கிட்டே நர்சு படிப்பு படிக்கலாம், சம்பளமும் கிடைக்கும்'னு சொன்னாங்க. நானும் அப்பாவும் போனோம். நல்லா பேசுனாங்க.

ஒரு லேடிஸ் ஹாஸ்டல் அட்ரஸ் கொடுத்து ரூம் அங்க இருக்கு
தங்கிங்கன்னு சொன்னாங்க.
' நர்சிங் காலேஜ்ல சேர்க்கிறோம்னு சொன்னாங்க. எங்கப்பாவுக்கு சந்தோசம்.

நல்ல இடத்துல பொண்ணை விட்டிருக்கோம்னு
நிம்மதியா வீட்டுக்கு கிளம்பிப் போனாரு.

ரெண்டாவது நாள் ராத்திரி ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துச்சு.

எனக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்க வச்சு என் உடைகளை அகற்றி படமெடுத்துட்டாங்க.

அடுத்த நாள் காலையில ஒரு பொண்ணு அந்த படத்தை என்கிட்ட காட்டினா.

நாங்க சொல்ற மாதிரி செய்யலைன்னா இதை வெளில எல்லார்கிட்டேயும் காட்டுவேன்'ன்னு மிரட்டினா.

எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே. வெளியில சொல்ல முடியல.

பயம், அழுகை அழுகையா வந்தது. மூணு நாள் அழுதேன்.

அந்தப் பொண்ணு என்னை தேத்திற மாதிரி பேசினா. கொஞ்சம் பணம் கொடுத்தா.

 அப்பறம் தான் என்னை வெளியில தொழிலுக்கு அனுப்ப ஆரம்பிச்சாங்க.
எங்க போனாலும் கூட ரெண்டு மூணு பேர் வருவாங்க.


இது யாருக்கும் தெரியாது. வேலைக்குப் போற மாதிரி போயிட்டு வருவோம்.

வீட்டுல நான் வேலைப் பார்த்துக்கிட்டே படிக்கிறேன்னு நினைக்கிறாங்க. என்னை மாதிரி நிறைய பெண்கள் இப்படி ஏமாந்திருக்காங்க.

இப்படி விளம்பரம் கொடுத்து ஏமாத்தறது மட்டுமில்லாம வேற சில வழிகளிலும் அப்பாவிப் பெண்களை ஏமாத்துறாங்க.

ஏழ்மையான பெண்கள் படிக்கும் கல்லூரிப் பக்கம் இருக்கும் டெலிபோன் பூத்களில் இதற்கென ஏஜெண்டுகள் இருப்பார்கள்.

அவர்கள் அங்கு வரும் பெண்களை வசியம் செய்து இந்த வலைக்குள் சிக்க வைத்துவிடுவார்கள்.

ஒரு முறை சிக்கினால் வெளியே வர இயலாது. வாழ்க்கை வீதிக்கு வந்துவிடும். எங்களுடனே பல கல்லூரிப் பெண்கள் பார்ட் டைமாக இந்த தொழிலை செய்துகொண்டிருக்கிறார்கள்.


இந்த தொழிலுக்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிறது.. அவ்வப்போது வீட்டிற்குச் சென்று ஓரிரு நாள் இருந்துவிட்டு வருவேன்.

அவர்களுக்கு நான் வேலை பார்த்துக்கொண்டே நர்சிங் படிப்பதாக எண்ணம்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் அதிகம் விசாரிப்பதில்லை.

நான் கொடுக்கும் பணம் அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது(விரக்தியாய் சிரிக்கிறார்) எனக்கும் இந்த வாழ்க்கை பணம் எல்லாம் பழகிடுச்சு. அடிமையாயிடுச்சு.


இனிமே எனக்கு வாழ்க்கை இல்லை' என்று சொல்லும்போது கண்களில் நீர்துளிகள்.

=====================================================================

அதே போல் டீக்கடைக்கு டீ குடிக்க வந்த பையனிடம் ஒரு நபர் நைசாக பேசி பழகி டீ வாங்கி கொடுத்திருக்கிறார். அந்த பையனும் அவருடன் சகஜமாக பழகி டீயை வாங்கி குடித்திருக்கிறான்... -கட்-
அந்த பையன் கண்விழித்து பார்க்கையில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கிறான்.. உடனே ஏதோ ஒரு ஆயுதம் பின்னால் தாக்கப்பட... மயக்கம் ஆகிவிட்டான்.. மீண்டும் கண்விழித்து பார்க்கையில் ஒரு ரூமில் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறான்.

கத்தியை காட்டி மிரட்டப் பட்டு உணவு ஊட்டப்பட்டிருக்கிறான்.. தினமும் ஒருவர் வந்து இன்சக்சன் போட்டிருக்கிறார்.... தொடர்ந்து 15 நாள் போட்டிருக்கிறார் .. பதினைந்தாவது நாள் நெருங்க பையனின் மார்பகம் வளர ஆரம்பிக்கிறது... கடைசியில் சிறு வலி கூட இல்லாமல் அவனது பிறப்புறுப்பு அறுக்கப்படுகிறது.. ... அவன் திருநங்கையாக மாற்றப்பட்டு பாலியல் தொழிலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறான்.....

( இதெல்லாம் நடந்தது மும்பையில்) ஒரு திருவிழா சமயத்தில் அந்த பையன் தப்பித்து மீண்டும் அவனது ஊருக்கு வந்திருக்கிறான்.. அவனுடைய பெற்றவர்களுக்கே அவனை அடையாளம் தெரியவில்லை . நாந்தாம்மா உன் புள்ள அப்படி என்று சொல்லி கதறி அழுதிருக்கிறான்.

தனது பையனை தெருவே நின்று வேடிக்கை பார்க்க...
அவமானம் தாள முடியாமல் குடும்பமே அழுதுதீர்த்தது...
பையன் மனமுடைந்து எல்லாரும் தூங்கிய நேரத்தில் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி இறந்துவிட்டான்...


=====================================================================

தற்பொழுது இணையத்தில் சாட்டிங்கின் மூலம் முகம் தெரியாத பல நபர்கள் பலரோடு பழகிவருகின்றனர்... அந்த பழக்கம் நல்ல விதமாக அமைந்துவிட்டால் பரவாயில்லை இல்லை என்றால் இவர் கதி தான்...

ஒருவர் சாட்டிங்கில் கேர்ள் பிரண்ட் கிடைத்தவுடன் சந்தோசமாக பழகி வந்திருக்கிறார்...உல்லாசமாக இருக்கலாம் வா என அவள் கூப்பிட இவரும் பணத்துடன் சென்றிருக்கிறார்...

சென்ற நேரம் இரவு 7 மணி .வர சொன்ன இடத்திற்கு முன்னதாகவே சென்று நின்றிருக்கிறார்... கார் வந்து நின்று ஒரு பெண் கூப்பிடவும். இவரும் புரிந்துகொண்டு சந்தோசமாக சென்று காரில் ஏறிருக்கிறார்...

கார் விரைந்திருக்கிறது... பிறகு தான் கவனித்திருக்கிறார்..தன்னிடம் பேசியது திருநங்கை என உணர்கிறார்....இவர் காரை நிப்பாட்ட சொல்ல...கார் நிக்காமல் சென்று ஒரு இருட்டான இடத்தில் நிற்கிறது..

அங்கே காத்திருந்த ரவுடிகள் இவரிடம் உள்ள பணம் நகை விலை மதிப்புள்ள செல்போன் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அடித்து துரத்திருக்கின்றனர்.....  (காவல் துறையில் புகார் செய்து பிறகு... அவர்களை பிடித்துவிட்டனர் காவல் துறையினர்)

======================================================================
ஒரு நிமிசம்:

இன்று இணையதளத்தில் சாதாரணமாக எந்த வேர்டையாவது போட்டு தேடினால் ஏகப்பட்ட ஆபாச தளங்கள் வருகிறது.. அதுவும் நாம் உன்னதமாக நினைக்கும் உறவுகளின் பெயர்களை கொச்சைப்படுத்தி நிறைய கதைகளும் படங்களும், காணொளிகளும்...வருகிறது..

இன்றைய சூழ்நிலையில் 6 வது , 7 வது படிக்கும் சிறுவர்களுக்கு எளிதாக இணையத்தை கையாள கூடிய திறமை இருக்கிறது.... இப்படி இணையத்தில் இது போன்று உறவுகளை கொச்சைப்படுத்தும் கதைகள் அவர்கள் கண்ணிற்க்கு ப்டும்போது அவர்கள் வாழ்க்கை தடம்புரண்டு கேள்விக்குறியாகி விடாதா... இப்படியே போனால் .. எதிர்கால சந்ததியரின் நிலை என்ன? நினைத்தாலே வேதனையை தருகிறது.

===============================================================

நண்பர்களே இது போன்ற அதிர்ச்சியான சம்பவங்கள் பயமுறுத்த சொல்ல வில்லை..நாம் மிகவும் விழிப்புடன் எச்சரிக்கையாக வாழவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருக்கிறோம்......  நீங்களும் இது போன்ற சம்பவங்கள் கேள்விப் பட்டிருந்தால்..கருத்துக்களில் தெரியபடுத்தவும் அன்பர்களே.... விசயம் தெரிந்து ஏனையவர்களுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

============================================================
அதுக்காக பயந்துட்டே இருந்தா எப்படி ..வாழ முடியாதுங்க... விழிப்புணர்வோடு இருப்போம்....



அட நம்ம அண்ணே இன்னும் பயம் தெளியாம இருக்காரு... அவரையும் தெளிய வச்சிட்டு போங்க....
========================================================================
உங்கள் பிரியமானவன்,

1 comments:

அருமையான பதிவு

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites