இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, March 25, 2012

தொழில் வாய்ப்பு

நம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார தாராள மயமாக்கப்பட்ட கொள்கைகளினால் எண்ணற்ற கம்பெனிகள் நம் நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்து வருவதாலும், நம் இந்திய மக்கள் தொகை பெருக்கத்தினால் நகரங்கள் அனைத்தும் விரிவடைந்து வீடுகள், கடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், நான்கு வழி / ஆறுவழி சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு விரிவாக்கங்களால் பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது விவசாயம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.உழவர்கள் எப்பொழுதும் மின்சாரத்தை நம்பி விவசாயத்தை முறைப்படி செய்ய இயலாமல் பலர் தவிக்கிறார்கள். இவர்களுக்கு ஒரு புதிய வரப்பிரசாதமாக சென்னை சௌத் இநதியன் கேஸ் ஏஜன்சியின்  திரு.இராஜேந்திரன் புதிய கியாஸ் அறிமுகம் செய்துள்ளார். அவரை கேட்டபோது…
தற்போது நம் மத்திய அரசாங்கத்தின் புதிய பொருளாதார தாராளமயமாக்கப்பட்ட கொள்கைகளினால் எண்ணற்ற கம்பெனிகள் நம் நாட்டில் தொழிற்சாலைகள் அமைத்து வருவதாலும், நம் இந்திய மக்கள் தொகை பெருக்கத்தினால் நகரங்கள் அனைத்தும் விரிவடைந்து வீடுகள், கடைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், நான்கு வழி / ஆறுவழி சாலைகள் அமைப்பதற்கான பல்வேறு விரிவாக்கங்களால் பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது விவசாயம் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. மேலும் நம் நாட்டு விவசாயிகள் தம்முடைய விவசாய பொருட்களை விளைவிக்க முக்கியமாக தண்ணீர் தேவைப்படுகிறது. அவைகள் முறையே ஆறு, குளம், குட்டைகள், ஏரிகள், கிணறு, போர்வெல், கிணறு ஆகிய இவைகள் மூலம் தண்ணீர் பெற்று விவசாயம் நடைபெறுகிறது. இவற்றில் கிணறு மற்றும் போர்வெல் கிணற்றில் இருந்து மின்சாரத்தின் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பெறப்படுகிறது. தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் பெருக்கத்தினால் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு போதிய அளவில் விவசாயம் செய்ய முடியவில்லை. விளைநிலங்கள் வெறும் நிலங்களாக உள்ளன. மேலும் தற்போதெல்லாம் பருவநிலை மாறியுள்ளது. இதனால் ஏற்ற காலத்தில் மழை பெய்வதில்லை,
இதனாலும் தண்ணீர் இல்லாததால் விவசாயி தொழில் செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன தெரியுமா?
நாம் அனைவரும் உயிர் வாழ உணவு மிகவும் அவசியம். அந்த உணவு தயார் செய்வதற்கு நம் நாட்டு¢ மக்கள் 75% பேர் விறகுகளையே பயன்படுத்தி வருகின்றனர். வீடு, டீக்கடைகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், பள்ளி / கல்லூரிகள் / பல்கலைக்கழங்களில் உள்ள விடுதிகள், ஆண்டுகள் / பெண்கள் விடுதிகள், சில தொழிற்சாலைகள் என யாவரும் விறகுகளை பயன்படுத்துகின்றனர். இதனால் தினந்தோறும் நம் இந்திய தேசமெங்கும் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்த இழப்பீட்னால் நம் தேசத்தில் சீதோஷண நிலை மாறுபடுகிறது. எனவே மழை பெய்வது பொய்த்து விடுகிறது. தற்போதைய சூழ்நிலையில் மக்கள் 120 கோடி பேருக்கு உணவு சமைகக (75%) 1 நாளைக்கு லட்சக்கணக்கான டன் மரங்கள் (விறகுகள்) தேவையெனல் 1 மாதம் / 1 வருடம் என கணக்கு போட்டால் பல கோடி டன் மரங்கள் வெட்டப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் கூடிய விரைவில் இந்திய தேசத்தில் உள்ள மரங்கள் பூராவும் வெட்டப்பட்டு, இதனால் மழை பெய்யாமல் காடுகள் அனைத்தும் அழிந்து பாலைவனம் ஆகிவிடும் என்ற சூழ்நிலைக்கு  மாறிவிடும். எனவே தான் நான் சொல்கிறேன் நம் மக்கள் உண்ணும் உணவு தயார் செய்வதற்கு 100க்கு 100% விறகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்று ஏற்பாடாக சமையல் எரிவாயு (லி.றி. நிணீs) தான் சிறந்த வழி. சமையலுக்கு என்று அனைத்து மக்களும் லிறி நிணீsஐ பயன்படுத்துவதால, மரங்கள் (விறகு) எரிப்பது குறைகிறது. இதனால் மரங்கள் வெட்டப்படுவது குறைகிறது.
நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த சமயத்தில் ஒரு மோட்டாரை தயார் செய்துள்ளேன். இதனை இயக்க போதுமானது. இந்த மோட்டாரை கொண்டு இயக்குவதால் மின்சாரம் உற்பத்தியாகிறது என்பதை கண்டறிந்தேன். இவ்வகையான மோட்டர்களையும் எமது கேஸ் சிலிண்டர்களையும் கொண்டு மின்சாரம் தயார் செய்வதை நான் விவசாயத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன். நம் நாட்டில் 75% விளைநிலங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளது. வருடத்திற்கு 1 முறை மட்டுமே இவ்வகையான மேட்டுக்காட்டு நிலங்களில் மானாவாரிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இவைகள் 3 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தபின், மற்ற எஞ்சிய 9 மாதங்கள் எந்தவிட பயனுமின்றி வெறுமனே கிடக்கின்றன. இவ்வகையான நிலங்களில் நீரோட்டம் பார்த்து, போர்வெல் அமைத்து எமது மோட்டார் மற்றும் சிலிண்டர் கொண்டு மின்சாரம் எடுத்து நிலத்தடி நீரை வெளிக்கொண்டு வந்து விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்.
இவ்வகையான செயல்பாட்டிற்கு போர்வெல் அமைப்பது மோட்டார், கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டர் அடாப்டர் கிட் பைப்புகள் மற்ற இதர பொருட்கள் ஆகியவற்றின் ரூபாய் ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வரை தேவைப்படும். இந்த தொகை ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். மாதா மாதம் சிலிண்டருக்கான கேஸ் தொகை செலுத்தினால் போதும். இந்த விவசாயிகள் மிகவும் பின்தங்கிய ஏழை விவசாயிகள். இவர்களால் லட்சக்கணக்கில் செலவு செய்து கிணறு வெட்டவோ அல்லது போர்வெல் அமைக்கவோ மற்றும் மின்சார வாரியத்திற்கு மின்சாரத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யவோ மேலும் மின்கம்பம் வயர் அமைத்து கொடுக்க செலவுகளையோ ஈடுகட்ட முடியாது.
எமது திட்டத்தின்படி எங்களது வாடிக்கையாளராக விரும்பும் விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மிகக்குறைந்த வட்டியில் கடன் ஏற்பாடு செய கொடுக்கப்படும். இந்த திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் சொந்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு நாங்கள் 33 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த உள்ளோம்.
மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் ஒரு விவசாயி தமது நிலத்திற்கான தண்ணீரை இறைத்துக் கொள்ளலாம். போர்வெல் பக்கத்தில் ஒரு ஷெட் (கொட்டகை) அமைத்துக் கொண்டால் அதில் சமையல் செய்து கொள்ளலாம். இரவில் லைட் எரித்துக் கொள்ளலாம். ஆக 3 காரியங்களில் எமது திட்டத்தால் விவசாயிகள் பயன்பெறலாம். 33 கிலோ கேஸ் எடையுள்ள சிலிண்டர் 2 முதல் 3 சிலிண்டர்கள் போதும். 5 ஏக்கர் நிலம் பயிர் செய்வதற்கு 3 மாதத்தில் பயிர் அறுவடை செய்து விடலாம்.
மாநில அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குகிறது. எமது திட்டம் பரவலாக்கப்படும் போது இந்த இலவச மின்சாரம் தேவையில்லை. இந்த இலவச மின்சாரத்தை கொண்டு மற்ற நல்ல திட்டங்களுக்கு அரசாங்கங்கள் செயல்படுத்த முடியும். தற்போதுள்ள மின்சார பற்றாக்குறைக்கு இந்த எமது திட்டம் மிகவும் ஏற்றது. எமது திட்டத்தினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடாமல் காக்கப்படுகிறது. கிராமத்திலுள்ள விவசாய தொழில் செய்யும் பாட்டாளி மக்களுக்கு வருடம் முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தத்தம் வாழ்வாதாரம் பெருகி மகிழ்ச்சியுடன் வாழ்வர். இந்த திட்டத்திற்கு நான் (கிரீக்ஷீவீநீuறீtuக்ஷீணீறீ நிணீs) விவசாய எரிவாயு என்று வைத்துள்ளேன். இது மட்டுமா!
பவதலூம் விசைத்தறி (நெசவுத் தொழில்)க்கும் எமது மோட்டார் + கேஸ் சிலிண்டர் கொண்டு மின்சாரம் பெற்று செயல்படுத்த முடியும். ஒரு விசைத்தறி இயக்க ஆகும் மின்சார செலவில், மீதப்படுத்தலாம். மேலும் 3 ஷிப்டுக்கு தொடர்ந்து விசைத்தறிகளை இயக்கலாம். சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். மின்சாரம் இல்லை என்ற கவலை வேண்டாம். விசைத்தறி உரிமையாளர்கள் இது சம்பந்தப்பட்ட அனைத்து சுயதொழில் முதலாளிகள், அனைத்து வகையான தொழிலாளர்கள் அனைவருக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடர்ந்து நடைபெற புதிய புதிய ரகங்கள், புதிய தொழில் நுணுக்கங்கள் புகுத்தி இந்த இந்திய ஜவுளித்துறையை உலகத்தில் நெ.1 ஆக கொண்டு செல்ல முடியும், இது மட்டுமா!
மீன்பிடித் தொழிலில் நம் நாடு விளங்குகிறது. ஏனெனில் 3 பக்கமும் கடல் எல்லைகளை கொண்ட நாடு நமது இந்திய நாடு. எனவே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பிடிக்கும் மீன்கள் டன் கணக்கில் கடல் அன்னை நம் மக்கள் வயிற்றுப் பசியை தணிக்கிறது. நம் தேவைப்போக அரிய வகை மீன்கள் மருத்துவ குணமுள்ள மீன்கள் வெளிநாட்டிற்கு அன்னிய செலாவணியை ஈட்டுகிறது.
எனவே இந்த மீன்பிடித் தொழிலுக்கும் மத்திய மாநில அரசுகள் மானிய விலையில் டீசல் சப்ளை செய்கிறது. இதனை சில சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபடும் குறுகிய எண்ணம் கொண்ட வியாபாரிகள் இந்த டீசலில் கலப்படம் செய்து மீன்பிடி மோட்டார்களுக்கு சப்ளை செய்கிறார்கள். இதனால் மோட்டார் பழுதடைந்து மோட்டார் இயங்காமல் காற்றடித்த பக்கம் விசைப்படகுகள் போய்விடக்கின்றன.
மழைக்காலங்களில் இவ்வகை படகுகளில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்து இயங்காததாலும், புயல் காற்றாலும் விசைப்படகுகள் நம் கடல் எல்லையை தாண்டி பிற நாட்டு கடல் எல்லைக்குள் செல்வதினால் நம் மதிப்பிற்குரிய மீனவ தொழிலாளர்கள் சொல்ல முயாத துன்பத்திற்கு உட்பட்டு பலபேர் உயிரிழக்கின்றனர்.
எனவே இதனை களையும் பொருட்டு, எமது திட்டத்தின்படி இவ்வகையான விசைப்படகுகள் இயங்கும்போது கடல் சூழ்நிலையில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. மீனவர்கள் விசைப்படகை இயக்கவும், இரவில் தேவைப்படும் லைட் எரிக்கவும், மேலும் சமைத்து சாப்பிடவும், ஆக 3 காரியங்களை செய்து கொள்ளலாம். ஒரு விசைப் படகுக்கு 17 கிலோ கமர்ஷியல் சிலிண்டர்கள் இரண்டு + மோட்டார் + உதிரி பாகங்கள் என ரூ. 30,000 முதல் ரூ. 50,000 ஒரு முறை செலவு செய்து அமைத்துக் கொண்டால் போதும், சிலிண்டர்களை தீரத்தீர மாற்றி சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இது மட்டுமா 1991, 92ல் சொன்னேன். இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களும் கேஸால் ஓடப்போகிறது. பெட்ரோல் பங்க் போல் கேஸ் பங்கும் வரப்போகிறது என்று. எமது திட்டத்தின்படி பஸ், லாரி, வேன், மோட்டார் சைக்கிள் ஆக பெட்ரோல், டீசலில் இயங்கக்கூடிய அனைத்து வாகனங்களும் கேஸால் இயங்க முடியும். இதனால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது. கேஸ் பயன்பாட்டினால வாகனத்தில் உள்ள இன்ஜின்கள் ஆயுள் கூடி ஓர் சுகமான பிரயாணத்தை நமக்கு வழங்குகிறது.
ஆக எமது நிறுவனத்தின் மூலம் இந்தியா முழுவதும் கீழ்க்கண்ட வியாபாரத் திட்டங்கள் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
1, Domestic Gas உபயோகத்திற்கு (12 Kg, 15 Kg
LPG) சிலிண்டர்கள்
2, Commercial Industrial Gas (17 Kg, 33 Kg, LPG சிலிண்டர்கள்)
3 , Automobile Gas (Auto Gas)
4, Agricultural Gas ( 33 Kg LPG) சிலிண்டர்கள்
மேற்கூறியுள்ள அளவு சிலிண்டர்களுடன் ரெகுலேட்டர்கள், ரப்பர் டியூப், லைட்டர், அடுப்புகள் சம்பந்தப்பட்ட பொருட்கள் விநியோகிக்கப்படும். இதற்கென தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களுக்கு மாவட்ட விநியோகஸ்தர்கள் (District Distributors) ஏரியா / யூனியன் வாரியாக டீலர்களை நியமித்துக் கொண்டு வருகிறோம். தமிழகத்தில் சுமார் 500 முதல் 600 டீலர்கள் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் வியாபாரிகள் படித்து வேலையற்ற பட்டதாரிகள், ஓய்வு பெற்றவர்கள் என பல்வேறு பிரிவினர் முதலாளிகளாகவும், ஆயிரக்கணக்கான பேர்கள் வேலை வாய்ப்பும் பெறுவார்கள். வீட்டு உபயோகத்திற்கு வழங்கப்படும் சிலிண்டர்களான 12 கிலோ, 15 கிலோ சிலிண்டர்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் வாடிக்கையாளருக்கு வழங்க உள்ளோம். அடுப்பு வாங்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. அரசாங்க நிறுவனமான இண்டேன் கேஸ் (மிளிசி) பாரத் கேஸ் (ஙிறிசி) எச்பி. கேஸ் (பிறி நிணீs) ஆகிய நிறுவனங்களில் சமையல் கேஸ் இணைப்பு பெற்றுள்ள யாவரும் எமது ஜி.எல்.ஓ.ஏ. ராஜம் கேஸ் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
இவர்கள் எங்களது சிலிண்டர்களுடன் 22 எம்.எம். ரெகுலேட்டர்களையும் வாங்கி கொள்ள வேண்டும். அரசாங்க நிறுவனத்தின் ரெகுலேட்டர்கள் எமது சிலிண்டருக்கு பொருந்தாது. மேலும் எமது அங்கீகாரம் பெற்ற டீலர்களிடம் கேஸ் இணைப்பு பெறும்போது எந்தவித ஐ.டி. புரூப், அட்ரஸ் புரூப் தேவையில்லை. குடும்பத்திற்கோ, ஹோட்டல், டீக்கடை, விடுதி, தொழிற்சாலைக்கோ எவ்வளவு வேண்டுமானாலும் தங்கு தடையின்றி சிலிண்டர்கள் சப்ளை செய்யப்படும்.
நவம்பர் / டிசம்பர் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வகையில் தொழில்முனைவோர்கள் உடனே அணுகி தொழில்வாய்ப்புப் பெற்று கை நியை சம்பாதிக்கலாம் என்கிறார்,
மேலும் விபரம் பெற 9381212777 /
044-2122779

Thnxs:http://thozhilathibar.com

1 comments:

எங்கள் ஊரில் சிலிண்டர் டீலர்ஷிப் எடுப்பதற்க்கு யாரை அணுக வேண்டும்.எவ்வளவு முதலீடு தெவை. எனது எண் 9047746722

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites