இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 9, 2014

பாறையிலும் பயிர் வளரும்... நிரூபித்துக் காட்டிய விவசாயி


மனசு வெச்சா... பாறையிலயும் பயிர் பண்ணலாம்' என்பார்கள். இதையே மந்திரமாக எடுத்துக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம், அரண்மனைப்பட்டியில், கருங்கல் பாறையாக இருந்த நிலத்தை, கடின முயற்சியால், விளைநிலமாக மாற்றியிருக்கிறார், கணபதி.
''இந்த நிலத்தை விவசாய நிலமா மாத்த முயற்சி எடுத்துக்கிட்டிருந்தப்ப, பார்த்தவங்க எல்லாம், 'கட்டாந்தரையில ஏம்ப்பா விவசாயம் பண்றே’னு கிண்டல் செஞ்சாங்க. அவங்க சொன்னதுலயும் ஒரு நியாயம் இருந்துச்சு. ஏன்னா, இது கருங்கல் பாறைதான். ஆனா, பத்து வருஷ போராட்டத்துக்குப் பிறகு, இப்ப பயிர் விளைஞ்சு நிக்கிறதைப் பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஊரே மலைச்சு நிக்குது'' என்று சொல்லி ஆச்சர்யம் கூட்டும் கணபதி, ஒரு வழக்கறிஞர்.
''பி.ஏ, பி.எல். படிச்சு முடிச்ச நான், சென்னை, தலைமைச் செயலகத்துல மொழிபெயர்ப்பாளர் வேலையில சேர்ந்தேன். எங்க குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அதனால, எனக்கும் விவசாயத்து மேல ஆர்வம். 84-ம் வருஷம் வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, கையில இருந்த காசை வெச்சு... கொஞ்சம் தரிசு நிலங்களை விலைக்கு வாங்கியும், கொஞ்ச நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் விவசாயத்தை ஆரம்பிச்சேன். அப்படித்தான் இந்த நிலமும் கைக்கு வந்துச்சு. ரெண்டு ஏக்கர் முழுசும் புதர்காடு மாதிரி இருந்துச்சு. 'இந்த நிலத்துல ஒண்μம் செய்ய முடியாது’னு ஊரே சொன்னாலும், 'விவசாய நிலமா மாத்தமுடியும்’னு நம்பிக்கை இருந்துச்சு'' என்று சொல்லும் கணபதி, அதை கொஞ்சம் கொஞ்சமாக சாதித்தும் இருக்கிறார்.
''2004-ம் வருஷம், கொஞ்ச பேரை சேர்த்துக்கிட்டு பாறையை உடைக்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமாக பாறைகளை உடைச்சு, ஆறு அடி வரைக்கும் எடுத்தோம். அப்பறம், கண்மாய் மண், என்னோட வயல்ல இருந்த மேல் மண் எல்லாத்தையும் கொண்டு வந்து... மூன்றரை அடி உயரத்துக்கு கொட்டி நிலத்தை சமப்படுத்தினோம். டிராக்டர் வெச்சு உழுது சின்னச் சின்ன கற்களையெல்லாம் எடுத்தோம். பாறைங்கிறதால 'போர்’ போட முடியல. அதனால, 14 கிணறுகளை வெட்டியிருக்கேன். ஒவ்வொண்μம் 70 அடி ஆழம். சில கிணறுகளுக்கு கரன்ட் கனெக்ஷன் இருக்கு. கனெக்ஷன் இல்லாத கிணறுகள்ல ஜெனரேட்டர் வெச்சு தண்ணி இறைச்சுதான் விவசாயம் பண்றேன்.
எனக்கு சொந்தமா 150 மாடுகளும், 400 ஆடுகளும் இருக்கு. ஒவ்வொரு ஏக்கர்லயும் நாலு நாளைக்கு மாட்டையும் ஆட்டையும் கட்டி வெச்சுடுவேன். வடக்கயிறால மூμ வரிசையா பிரிச்சு, ஒவ்வொரு வரிசையிலும் 15 மாடுகளை எதிர் எதிரா கட்டிடுவேன். ஆடுகளை மொத்தமாகக் கட்டிடுவேன். இதனால, அதுகளோட சாணம், மூத்திரம் ரெண்டும் நிலத்திலேயே விழுந்துடும். அஞ்சு நாள் கழிச்சு சாணம் காயுறதுக்குள்ள உழுது விட்டுட்டதால... அவ்வளவு சத்தும் மண்ணுல சேர்ந்து நிலம் வளமாகிடுச்சு. 15 ஏக்கர்ல மக்காச்சோளம், 5 ஏக்கர்ல சின்ன வெங்காயம் போட்டிருந்தேன். மக்காச்சோளத்துல 30 டன், சின்ன வெங்காயத்துல 7 டன் மகசூல் கிடைச்சுது.
மாசத்துக்கு ஒரு தடவை வேப்பம் பிண்ணாக்குக் கரைசலை அடிச்சதை தவிர, உரம்னு எதையுமே தனியா வாங்கி கொட்டல. 'மாட்டுச்சாணத்தையும், மூத்திரத்தையும் மட்டுந்தான் அடியுரமா போட்டேன்’னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க. அந்தளவுக்கு விளைஞ்சு நின்னதுதான் காரணம். இயற்கை உரத்தோட அருமை இப்பதான் இந்தப் பக்கம் இருக்கறவங்களுக்கு புரியுது'' என்று சொன்ன கணபதி,
''மக்காச்சோளம் ஒரு டன் சராசரியா 15,000 ரூபாய் விலை போனதுல... 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. சின்ன வெங்காயத்துக்கும் நல்ல விலை கிடைச்சுது. சராசரியா கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. இதுல செலவு ஒண்ணரை லட்ச ரூபாய் போனா, 5 லட்சத்து 80 ஆயிரம் ரூபா லாபம். மக்காச்சோளத் தட்டையை அப்படியே மடக்கி உழுது, கேழ்வரகு நடலாம்னு இருக்கேன்'' என்ற கணபதி,
'மொத்தமா கணக்குப் பார்த்தா... கொஞ்சம் கூடுதலாத்தான் செலவழிச்சுருக் கேன். ஆனா, ஒண்μக்கும் உதவாத பாறை நிலம் விளைஞ்சு நிக்கறதைப் பாக்கும்போது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்துக்கு ஈடு, இணை கிடையாது. அதனால தான், என்னை 'அட்வகேட்’னு சொல்லிக்கிறதைவிட 'விவசாயி’னு தான் சொல்லிக்கிறேன்'' என்று சொல்லி பெருமிதப் பார்வையை வீசினார்!

ரியல் எஸ்டேட்டுக்கு தடா!
அரண்மனைப்பட்டி, குருந்தம்பாறை ஆகிய பகுதிகள், திருச்சி நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளன. அந்தப் பகுதிகளை ரியல் எஸ்டேட் அதிபர்கள் சிலர் வளைக்க முயல... அதைத் தடுத்து நிறுத்தியிருகிறார், கணபதி. இதைப் பற்றி பேசியவர், ''மழை இல்லாததால, வறட்சியோட பிடியில சிக்கின விவசாயிங்க, திக்குத் தெரியாம நின்னாங்க. இதைப் பயன்படுத்திக்கிட்ட சிலர், விவசாயிங்ககிட்ட பணவலையை வீசினாங்க. அது தெரிஞ்சதுமே, ஊர்க் கூட்டத்தைக் கூட்டி, 'மழையில்லாத காரணத்துக்காக யாரும் நிலத்தை விக்காதீங்க. விவசாயம் செய்யறதுக்கு தண்ணியும், விதைநெல்லும் நான் கொடுக்குறேன்’னு சொன்னேன். அதனால, நிறைய பேர் ரியல் எஸ்டேட்காரங்ககிட்ட வாங்கின அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துட்டாங்க'' என்று சொன்னார்.
இதை ஆமோதித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமையா, ''அஞ்சு வருஷத்துக்கு முன்ன சரியா மழையில்லாததால, 'நிலத்தை வித்துடலாம்’னு முடிவு பண்ணினேன். அதைத் தெரிஞ்சுகிட்டு கணபதி ஐயாதான் அவர் கிணத்துல இருந்து, மூμ கிலோ மீட்டர் தூரம் இருக்கற என் நிலத்துக்கு பைப் மூலமா தண்ணியும் கொடுத்து... விதைநெல்லும் கொடுத்தாரு. அவராலதான் இப்போ தொடர்ந்து விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இல்லேனா, இன்னிக்கு என் நிலத்துலயும் ரியல் எஸ்டேட் கொடி பறக்க ஆரம்பிச்சுருக்கும்'' என்று சொன்னார்.
தொடர்புக்கு,
கணபதி,
செல்போன்: 98400-98480.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites