இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, February 9, 2014

பொம்மையாகுது உல்லன்!

உல்லன் நூல் என்றதும் நமக்கெல்லாம் குல்லாவும், ஸ்வெட்டரும்தான் நினைவுக்கு வரும். கன்னியாகுமரியைச் சேர்ந்த செண்பகவள்ளியின்  கைவண்ணத்தில் ஒவ்வொரு கண்டு உல்லன் நூலும் அழகிய கைவினைக் கலைப்பொருளாக உருவெடுக்கிறது.Getting a wool doll!


‘‘பிளஸ் டூதான் படிச்சிருக்கேன். சமுதாய மேம்பாட்டுத் திட்டத்துல நிறைய கைவினைக் கலைகள் கத்துக்கிட்டேன். அப்படிக் கத்துக்கிட்டதுதான்  உல்லன் நூல் வேலைப்பாடும், குரோஷா வேலைப்பாடும். உல்லன்ல மாலை, திரைச்சீலை, குட்டிக் குட்டி கூடைகள், பொம்மைகள், கோழிக்குஞ்சு,  டெலிபோன் மேட், டேபிள் மேட், குடைன்னு ஏகப்பட்டது செய்யலாம். 

சாதாரணமா ஃபர் கிளாத்ல பொம்மைகள் பண்றதுன்னா, அதுக்கான செலவு ரொம்ப அதிகம். ஆனா, அதே பொம்மைகளை உல்லன்ல செய்தா அழகும்  கூடும்... செலவும் குறைவு’’ என்கிறவர் குரோஷா முறையிலும் பலவித கைவினைப் பொருட்களைச் செய்கிறார்.‘‘குரோஷா பின்னத்  தெரிஞ்சவங்களுக்கு ஹேண்ட்பேக், பர்ஸ், சின்னச் சின்ன பொம்மைகள்னு அதுக்கேத்த பொருட்கள் இருக்கு. பின்னத் தெரியாதவங்க உல்லன்ல  செய்யலாம். ரெண்டுக்குமே தனித்தனியா 500 ரூபாய் முதலீடு போதுமானது. உல்லன் நூல், குரோஷா ஊசி, ஃப்ரேம், பூம்பாம் செட்... இது மட்டும்தான்  தேவையான பொருட்கள். 

ஒரு பொருள் செய்ய அரை மணி நேரம் போதும். குறைஞ்சபட்சம் 15 ரூபாய்லேருந்தே விற்கலாம். டெடிபியர் மாதிரியான பொம்மைகளை அளவைப்  பொறுத்து 25 முதல் 75 ரூபாய் வரைக்கும் கொடுக்கலாம். 50 சதவிகித லாபம் நிற்கும். ஃபேன்சி ஸ்டோர், கண்காட்சிகள்ல விற்கலாம். நவராத்திரிக்கு  ஒரே மாதிரியான அன்பளிப்பு கொடுக்க நினைக்கிறவங்களுக்கு சரியான சாய்ஸ் என்கிற செண்பகவள்ளி, குரோஷா பின்னல் தேவைப்படாத 5  பொருட்களை 250 ரூபாய் கட்டணத்தில் ஒரே நாளிலும், குரோஷாவுக்கான அடிப்படைப் பயிற்சியுடன் சேர்த்து, 10 பொருட்களை 2 நாட்கள்  பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்திலும் கற்றுத் தருகிறார். பத்து, பதினைந்து பேர் கொண்ட குழுவாகக் கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு, அவரவர்  ஊரிலேயே சென்று வகுப்புகள் எடுக் கவும் தயாராம். 

99446 73363

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites