இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, July 8, 2012

செயற்கை ரப்பர் பயன்பாடு 4.23 லட்சம் டன்னாக உயர்வு



புதுடில்லி: உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, கடந்த 2011-12ம் நிதியாண்டில், 4.23 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய 2010-11ம் நிதியாண்டை விட, 3 சதவீதம் (4.12 லட்சம் டன்) அதிகம் என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உற்பத்திஅதேசமயம், சென்ற நிதியாண்டில், உள்நாட்டில், இதன் உற்பத்தி, 1.11 லட்சம் டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.10 லட்சம் டன்னாக காணப்பட்டது. உள்நாட்டில், செயற்கை ரப்பர் உற்பத்தி குறைவாக இருப்பதால், நம் நாடு, வெளி நாடுகளிலிருந்து, இதை அதிகளவில் இறக்குமதி செய்து கொள்கிறது.கணக்கீட்டு ஆண்டுகளில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 8 சதவீதம் அதிகரித்து, 3.02 லட்சம் டன்னிடருந்து, 3.28 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த செயற்கை ரப்பர் பயன்பாட்டில், வாகன டயர் தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் அதிகளவில் உள்ளது.சென்ற நிதியாண்டில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் செயற்கை ரப்பர் பயன்பாடு, 3 சதவீதம் அதிகரித்து, 2.98 லட்சம் டன்னிலிருந்து, 3.08 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.டயர் தயாரிப்பு தவிர, டியூப்கள், காலணிகள், பெல்டுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், செயற்கை ரப்பர் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.உள்நாட்டில், இயற்கை மற்றும் செயற்கை ரப்பர் பயன்பாடு, 69:31 என்ற விகிதத்தில் உள்ளது. கணக்கீட்டு ஆண்டுகளில், இயற்கை ரப்பர் பயன்பாடு, 2 சதவீதம் வளர்ச்சிகண்டு, 9.47 லட்சம் டன்னிலிருந்து, 9.66 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.நடப்பாண்டு மார்ச் மாதத்தில், உள்நாட்டில், செயற்கை ரப்பர் பயன்பாடு, 36,280 டன்னாகஅதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில், 36,025 டன்னாக இருந்தது.வாகன விற்பனைஇருப்பினும், சர்வதேச சுணக்க நிலையால், நடப்பாண்டில், உள்நாட்டில், வாகன விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், டயர் தயாரிப்பு நிறுவனங்களின், செயற்கை ரப்பர் பயன்பாடு, சென்ற மார்ச் மாதத்தில், 26,289 டன்னாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், 26,295 டன்னாக இருந்தது.இதே மார்ச் மாதங்களில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 9,343 டன்னிலிருந்து, 8,135 டன்னாக சரிவடைந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி, 26, 275 டன்னிலிருந்து, 30,300 டன்னாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி, 50,325 டன் செயற்கை ரப்பர் கையிருப்பு இருந்ததாக என, ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites