இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, July 15, 2012

பானை ஓவியம்


தேவையான பொருட்கள்:
  • பானை
  • உப்பு காகிதத் தாள்
  • பிரஷ்
  • fabric கலர்கள் (சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு, மெட்டல்)
  • எம்சீல்
  • பெவிகால்
  • வார்னிஸ்
செய்முறை:
  • பானையை உப்புத்தாள் கொண்டு நன்கு தேய்க்கவும்.
  • பின்பு நன்றாக தண்ணீரில் 1மணி நேரம் ஊறவைத்து காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பானை முழுவதிற்கும் கருப்பு fabric கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும்.
  • பின்பு பாதியளவு மெட்டல் கலரை அடிக்கவும். 1/2மணி நேரம் காயவிடவும்.
  • எம்சீலில் இரண்டு கலர் இருக்கும். அதனை எடுத்து நன்றாக மிக்ஸ் பண்ணி பிசைய வேண்டும்… 5 நிமிடம் ஊறவிடவும்.
  • பின்பு பூ இதழ்களுக்கு சிறிது எம்சீல் கலவையை எடுத்து திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் மேலே மட்டும் விரியும். மேலே மட்டும் இரண்டு சைடு சுருட்டி விடவும். இப்படி எவ்வளவு தேவையோ எடுத்து காயவைத்துக் கொள்ளவும்.
  • இலைகளுக்கு திலகம் shapeல் உருட்டி ஒரு விரல் கொண்டு அழுத்தினால் இலை shape வந்து விடும். அதில் சிறு குச்சி எடுத்துக் கொண்டு இலைகளில் இருப்பது போல் கோடுகள் வரையவும். எவ்வளவு தேவையோ எடுத்து காயவைத்துக் கொள்ளவும்.
  • கொடிகளுக்கு சிறு உருண்டை எடுத்து நீளமாக மெல்லதாக உருட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை காயவைக்க தேவையில்லை.
  • பின்பு பானையில் பூவிதழ் கொண்டு பூவையையும் இலையையும் கொடியையும் பசை கொண்டு ஒட்டி காய விடவும்.
  • பூவிற்கு சிவப்பு கலரும், இலை மற்றும் கொடிக்கு பச்சை மஞ்சள் கலரையும் அடிக்கவும்.
  • பின்பு நன்றாக நிழலில் காயவிடவும்.
  • காய்ந்த பின்பு வார்னிஸ் அடித்து காயவிடவும்.
  • அழகான பூந்தொட்டி தயார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites