வறுவல், பொரியல் என
எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய
தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து
பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு
எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய்
எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில்
என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா
பீன்ஸ், தேங்காய், எள் போன்ற
மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
சந்தை
வாய்ப்பு!
உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை
எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில்
பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ்
அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக
அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு
குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய்
தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த
சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில்
தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே
இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.
முதலீடு!
எண்ணெய் உற்பத்தி செய்யத்
தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான்.
ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி
செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச
ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன்
மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.
| |
![]()
கட்டடம்!
ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக
ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ
எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது
அவசியம்.
வேலையாட்கள்!
இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும்
அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள்
ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.
![]() மூலப் பொருட்கள்! ![]()
தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.
![]() இயந்திரம்!
எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.
தயாரிப்பு முறை!
![]() ![]() பிளஸ்! ![]()
தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய்
என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில்
தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால்
கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.
மைனஸ்!
மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன்
விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால்
தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.
இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப்
பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!
|
0 comments:
Post a Comment