இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, March 9, 2014

தர்மபுரி தென்னை நார் கயிறு சீனாவுக்கு ஏற்றுமதி

தர்மபுரி : தர்மபுரி அருகே தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் நார் கயிறு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் சீனாவிற்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது. 

தமிழகத்தில் தேங்காய் நார் கயிறு தயாரிப்பில் பொள்ளாட்சி முதலிடத்தில் உள்ளது. திண்டுக்கல், திருநெல்வேலி, பட்டுக்கோட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதிகளவில் தேங்காய் நார் கயிறு தயாரிக்கப்படுகிறது. இதில், தர்மபுரி மாவட்டம் 4வது இடத்தில் உள்ளது. 

தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் டவுன், அனுமந்தபுரம், கெரகோடஅள்ளி, கள்ளம்பட்டி, மண்ணாடிப்பட்டி, பாளையம்புதூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், அரசம்பட்டி ஆகிய இடங்களில் தேங்காய் நார் கயிறு மற்றும் அதிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் கயிறு, மெத்தை விரிப்பு, மிதியடி மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் பெங்களூர், ஹைதராபாத், தமிழகத்தில் சென்னை, ஓசூருக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. சமீபகாலமாக சீனாவுக்கும் ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. 

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தென்னை நார் தொழிற்சங்க செயலாளர் முனிராஜ் கூறியதாவது: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் மட்டையிலிருந்து அதிகளவில் கயிறு தயாரிக்கப்படுகிறது. 35 கிலோ எடையுள்ள ஒரு பண்டல் தேங்காய் நார் ரூ.350 முதல் ரூ.560 வரை விற்பனை செய்யப்படுகிறது. 

தேங்காய்நார் கயிறு கட்டுமான பணிகளுக்கு அதிகமாக விற்பனை செய்கிறோம். ஒரு பண்டல் ரூ.900 முதல் ரூ.1200க்கு விற்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவிற்கு கயிறு ஏற்றுமதி நடக்கிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இங்கிருந்து சீனாவுக்கும் ஏற்றுமதி அதிகரிக்க தொடங்கியுள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில சிறு மற்றும் குறு நிறுவனங்கள் நேரடி ஏற்றுமதியை தொடங்கியுள்ளன. இதனால் தென்னை நார் வர்த்தகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

எக்ஸ்ட்ரா தகவல்

தமிழகத்தில் 13 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. அதிலிருந்து ஆண்டுக்கு 1.30 லட்சம் டன் தேங்காய் மட்டை கிடைக்கிறது. பஞ்சு நூல் தயாரிப்பது போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப்படுகிறது. - See more at: http://dnk.dinakaran.com/News_Detail.asp?Nid=59124#sthash.xSpFgrXD.dpuf

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites