இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, March 9, 2014

10 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட பஞ்சாப் எருமை!


பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மொகாலி பகுதியில் 'பஞ்சாப் விவசாய உச்சி மாநாடு’ நடந்து. அதில், சிறந்த கால்நடைகள் பற்றிய கண்காட்சி மற்றும் போட்டி நடைபெற்றது. கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த, லம்பர்தார் சோமல் என்பவர், தன்னுடைய 'கொழு கொழு’ எருமையை காட்சிக்கு நிறுத்தியிருக்கிறார். 1,200 கிலோ எடை, ஐந்தே முக்கால் அடி உயரம், 11 அடி நீளம் கொண்ட அந்த எருமை, பார்ப்பவர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அந்த எருமைக்கு தினமும் தீவனத்துடன் 10 லிட்டர் பாலும் கொடுப்பாராம், சோமல். சிறந்த எருமை வளர்ப்புக்கான பல போட்டிகளில் தன் எருமையுடன் கலந்து கொண்ட சோமல், அனைத்திலும் முதல் பரிசைப் பெற்றுள்ளார். அந்த எருமையைக் கண்டு வியந்த வெளிநாட்டினர் சிலர், பத்து கோடி ரூபாய் வரை கொடுத்து வாங்க முன்வந்துள்ளனர். ஆனால், சோமல் அதை விற்க மறுத்துவிட்டார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites